ETV Bharat / state

ஆசிரியரைத் தாக்கிய பள்ளி மாணவர்கள்: ஆறு பேர் இடைநீக்கம்! - teacher attacked by students

அரியலூர்: ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த வேதியியல் ஆசிரியரைத் தாக்கிய ஆறு மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்துள்ளார்.

teacher attacked by students in ariyalur
author img

By

Published : Oct 12, 2019, 9:19 AM IST

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வேதியியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியநாதர் நேற்று மாலை வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நின்று கூச்சல் எழுப்பியும், விசிலடித்தும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இடையூறு ஏற்படுத்திய மாணவர்களை அவர் கண்டித்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு நேற்று அந்த மாணவர்களில் சிலர் சேர்ந்து வகுப்பறைக்குள் சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை ஒருமையில் பேசி பாடம் நடத்தவிடாமல் இடையூறு செய்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் போராட்டம்

இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாணவன் அஜித்குமாரை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த அஜித்குமார், ஆசிரியரை திருப்பி அடித்துள்ளார். உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆசிரியரைத் தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளிக்கு எதிர்புறம் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே அமர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஹரி செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவுபடி அத்துமீறி வகுப்பிற்குள் நுழைந்து ஆசிரியரைத் தாக்கிய அஜித்குமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்தார். பின்னர், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வேதியியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியநாதர் நேற்று மாலை வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது அப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நின்று கூச்சல் எழுப்பியும், விசிலடித்தும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இடையூறு ஏற்படுத்திய மாணவர்களை அவர் கண்டித்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு நேற்று அந்த மாணவர்களில் சிலர் சேர்ந்து வகுப்பறைக்குள் சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை ஒருமையில் பேசி பாடம் நடத்தவிடாமல் இடையூறு செய்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் போராட்டம்

இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாணவன் அஜித்குமாரை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் கோபமடைந்த அஜித்குமார், ஆசிரியரை திருப்பி அடித்துள்ளார். உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆசிரியரைத் தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பள்ளிக்கு எதிர்புறம் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே அமர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஹரி செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவுபடி அத்துமீறி வகுப்பிற்குள் நுழைந்து ஆசிரியரைத் தாக்கிய அஜித்குமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்தார். பின்னர், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:அரியலூர் - அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை தாக்கியதை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்பறை புறக்கணித்து வெளியில் அமர்ந்து போராட்டம் - 6 மாணவா்கள் சஸ்பெண்ட்Body:அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வேதியியல் துறை பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஆரோக்கியநாதர் நேற்று மாலையில் வேதியல் துறை வகுப்பறை பாடம் நடத்தும்போது எப்பொழுதுமே பொது எந்திரவியல் மாணவர்களில் சிலர் வகுப்பறைக்கு வெளியில் உள்ள சிமெண்ட் கட்டையில் அமர்ந்து வகுப்பறையில் உள்ள மாணவிகளை பார்த்து வருவது வந்து இருப்பது வழக்கமாகி இருந்தது இதனால் இதைப் பார்த்த ஆசிரியர் ஆரோக்கியநாதன் பள்ளி மாணவர்களிடம் அவர்களை நீங்கள் பார்க்க வேண்டாம் உங்கள் பாடத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் எனக்கூறிதிட்டியுள்ளார்.

இதனை அந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் வெளியில் சிமெண்ட் கடையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் யாரோ ஒருவர் கூறியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு அந்த மாணவர்கள் அஜித்குமார் உள்ளிட்ட சிலர் சேர்ந்து இன்று வகுப்பறைக்குள் சென்று பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஆரோக்கியநாதன் இனி இது போல் நீங்கள் கூறினீர்கள் என ஒருமையில் பேசி பாடம் நடத்தவிடாமல் அவரை திட்டி உள்ளனர். இதனால் கோபமடைந்த ஆசிரியர் மாணவன் அஜித் குமாரை அடித்துள்ளார் மேலும் கோபமடைந்த அஜித்குமார் ஆசிரியரை திருப்பி தாக்கியுள்ளார் உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் மாணவர் ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பள்ளிக்கு எதிர்ப்புறம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் போலீசார் பேச்சுவார்த்தையில் பள்ளிக்கு சுற்றுச் சுவருக்கு உள்ளே வந்து வகுப்பறையை புறக்கணித்து தலைமை ஆசிரியர் அறைக்கு எதிர்புறம் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தலைமை ஆசிரியர் பொறுப்பு மற்றும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்

ஆசிரியர் தாக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் பேச்சுவார்த்தையின் பிறகு மாணவ மாணவிகள் மரத்தில் மரத்தடி நிழலில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தனர் இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஹரி செல்வராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய அஜித்குமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் Conclusion: திங்கட்கிழமை அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வந்து ஆலோசனை செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனா்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.