ETV Bharat / sports

சச்சின் மகனுக்கு நேர்ந்த சோகம்

author img

By

Published : Oct 1, 2021, 4:31 PM IST

ஐபிஎல் போட்டியிலிருந்து அர்ஜூன் டெண்டுல்கர் விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

arjun tendulkar
arjun tendulkar

கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின. இந்த சீசனில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

முதன்முதலாக அர்ஜூன் ஐபியலில் ஆடவிருந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் இதுவரையிலான ஆட்டங்களில் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதாக மும்மை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக அறிமுக வீரர் சமர்ஜீத் சிங் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அர்ஜூன் டெண்டுல்கர் விலகியதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: IPL 2021 SRH vs CSK: சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு; சாஹா நிதானம்

கரோனா காரணமாக பாதியில் ரத்துசெய்யப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கின. இந்த சீசனில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

முதன்முதலாக அர்ஜூன் ஐபியலில் ஆடவிருந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. இருப்பினும் இவர் இதுவரையிலான ஆட்டங்களில் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதாக மும்மை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்றாக அறிமுக வீரர் சமர்ஜீத் சிங் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அர்ஜூன் டெண்டுல்கர் விலகியதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: IPL 2021 SRH vs CSK: சென்னைக்கு 135 ரன்கள் இலக்கு; சாஹா நிதானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.