இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் பற்றிய தீயானது மளமளவென பரவி படுக்கை அறை மற்றும் பிறபகுதிகளுக்கும் பரவியது.
உடனடியாக வீட்டிற்கு அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை என்றும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்ததுள்ளனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தீயணைப்பு துறையினர் காப்பற்றியுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கொச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சூதாட்ட புகாரில் ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 15ஆம் தேதி நீக்கியது. மேலும் ஸ்ரீசாந்திற்கான தண்டனை 7 ஆண்டுகள் என நீதிபதி டி.கே.ஜெயின் சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி வரும் 2020 செப்டம்பர் 12ஆம் தேதியுடன் அவரின் தண்டனை காலம் முடிவிற்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.