ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து - PV Sindhu progresses to quarters

லண்டன்: 2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து முன்னேறியுள்ளார்.

all-england-open-pv-sindhu-progresses-to-quarters
all-england-open-pv-sindhu-progresses-to-quarters
author img

By

Published : Mar 13, 2020, 12:25 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து - தென் கொரியாவின் சிங் ஜி ஹியூன் ஆகியோர் மோதினர்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைக் கைப்பற்ற கடுமையாகப் போராடினர். முதல் செட் ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் வரை நீடித்தது. காலிறுதிப் போட்டியில் சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஒகுஹாரா அல்லது டென்மார்க்கின் ஹோஜ்மார்க் மோதவுள்ளனர்.

முன்னதாக நடந்த உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து இந்தியாவின் லக்‌ஷ்யா சென் ஆடினார். அதில் 17-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி போனப்பா - சிக்கி ரெட்டி இணை 13-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் மிசாக்கி - அயாகா இணையிடன் தோல்வியடைந்தது.

லக்‌ஷ்யா சென்
லக்‌ஷ்யா சென்

மேலும் இந்தியாவின் சாய் ப்ரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் ஏற்கனவே ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து - தென் கொரியாவின் சிங் ஜி ஹியூன் ஆகியோர் மோதினர்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் புள்ளிகளைக் கைப்பற்ற கடுமையாகப் போராடினர். முதல் செட் ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலைப் பெற்றார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் வரை நீடித்தது. காலிறுதிப் போட்டியில் சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஒகுஹாரா அல்லது டென்மார்க்கின் ஹோஜ்மார்க் மோதவுள்ளனர்.

முன்னதாக நடந்த உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து இந்தியாவின் லக்‌ஷ்யா சென் ஆடினார். அதில் 17-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி போனப்பா - சிக்கி ரெட்டி இணை 13-21, 14-21 என்ற கணக்கில் ஜப்பானின் மிசாக்கி - அயாகா இணையிடன் தோல்வியடைந்தது.

லக்‌ஷ்யா சென்
லக்‌ஷ்யா சென்

மேலும் இந்தியாவின் சாய் ப்ரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் ஏற்கனவே ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

இதையும் படிங்க: 'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.