ETV Bharat / sitara

'இருட்டு' கூட்டணியில் உருவாகும் 'தலைநகரம் 2'

சென்னை:  இயக்குநர் வி.இசட். துரை - சுந்தர். சி கூட்டணியில் 'தலைநகரம் 2' திரைப்படம் உருவாக உள்ளது.

author img

By

Published : Jun 26, 2020, 1:56 PM IST

தலைநகரம் 2
தலைநகரம் 2

இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி நடிப்பில் வி.இசட். துரை இயக்கிய படம் 'இருட்டு'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் நடித்துவரும் 'நாற்காலி' என்னும் திரைப்படத்தை துரை இயக்கிவருகிறார்.

இதனையடுத்து துரை சுந்தர். சிக்காக ஒரு கதை தயார் செய்துள்ளார். இந்தக் கதை சுந்தர். சி நடித்து ஹிட்டான 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.

இந்தப் படத்திற்காக சுந்தர். சி இரண்டு மாதங்களுக்கு தாடி வளர்க்க வேண்டும் என்பதால் இந்தக் கதை தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கிய நிலையில் இருந்த இயக்குநர் சுந்தர். சி, மூன்று மாதங்களாக தாடி வளர்த்துவருகிறார். தாடி வளர்ந்துவிட்டதால் 'தலைநகரம் 2' படத்தை கரோனா ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

'தலைநகரம்' முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு காமெடி முக்கியப் பங்காற்றியதால் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 'தலைநகரம் 2' படத்திலும் வடிவேலுவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி நடிப்பில் வி.இசட். துரை இயக்கிய படம் 'இருட்டு'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் நடித்துவரும் 'நாற்காலி' என்னும் திரைப்படத்தை துரை இயக்கிவருகிறார்.

இதனையடுத்து துரை சுந்தர். சிக்காக ஒரு கதை தயார் செய்துள்ளார். இந்தக் கதை சுந்தர். சி நடித்து ஹிட்டான 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.

இந்தப் படத்திற்காக சுந்தர். சி இரண்டு மாதங்களுக்கு தாடி வளர்க்க வேண்டும் என்பதால் இந்தக் கதை தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கிய நிலையில் இருந்த இயக்குநர் சுந்தர். சி, மூன்று மாதங்களாக தாடி வளர்த்துவருகிறார். தாடி வளர்ந்துவிட்டதால் 'தலைநகரம் 2' படத்தை கரோனா ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு ஆரம்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

'தலைநகரம்' முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு காமெடி முக்கியப் பங்காற்றியதால் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 'தலைநகரம் 2' படத்திலும் வடிவேலுவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.