ETV Bharat / sitara

மீண்டும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'

author img

By

Published : Apr 30, 2019, 11:04 PM IST

பேரழகி ஐ.எஸ்.ஓ திரைப்படம் ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படம் என்று படத்தின் இயக்குநர் விஜயன்.சி தெரிவித்துள்ளார்.

பேரழகி ஐ.எஸ்.ஓ, நடிகை ஷில்பா மஞ்சுநாத்

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. இப்படத்தில், விவேக் கதாநாயகனாகவும், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் , நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படத்தின் இயக்குநர் விஜயன் கூறியதாவது, 'பேரழகி ஐ.எஸ்.ஓ' ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்பதால் ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

Actress shilpa manjunath
பேரழகி ஐ.எஸ்.ஓ, நடிகை ஷில்பா மஞ்சுநாத்

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவக்குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. அதை எப்படி மீண்டும் நாயகி ஷில்பா மீட்கிறார் என்பதே கதை. ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி ஐ.எஸ்.ஓ இருக்கும். ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மே-10 ஆம் தேதி பேரழகி ஐ.எஸ்.ஓ திரைப்படம் வெளியாகும்' என இயக்குநர் விஜயன்.சி தெரிவித்தார்.

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. இப்படத்தில், விவேக் கதாநாயகனாகவும், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் , நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படத்தின் இயக்குநர் விஜயன் கூறியதாவது, 'பேரழகி ஐ.எஸ்.ஓ' ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் என்பதால் ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

Actress shilpa manjunath
பேரழகி ஐ.எஸ்.ஓ, நடிகை ஷில்பா மஞ்சுநாத்

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவக்குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. அதை எப்படி மீண்டும் நாயகி ஷில்பா மீட்கிறார் என்பதே கதை. ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி ஐ.எஸ்.ஓ இருக்கும். ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மே-10 ஆம் தேதி பேரழகி ஐ.எஸ்.ஓ திரைப்படம் வெளியாகும்' என இயக்குநர் விஜயன்.சி தெரிவித்தார்.

சயின்ஸ் பிக்ஷனாக உருவாகும்
பேரழகி ஐ.எஸ்.ஓ' .

கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி  தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.

 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா'  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும்,   இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் , நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன்  உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 

'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
 பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குனர் விஜயன் கூறியதாவது, 

" பேரழகி ஐ.எஸ்.ஓ  ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. 

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக  பேரழகி ஐ.எஸ்.ஓ  இருக்கும். 

ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம், என விஜயன் கூறினார்.

வரும் மே-10 முதல் இந்த  திரைப்படம் வெளியாகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.