ETV Bharat / sitara

ஒரு வழியாகத் தொடங்குகிறது 'மாநாடு' ஷூட்டிங் - உற்சாகத்தில் எஸ்.டி.ஆர் ரசிகர்கள்

author img

By

Published : Feb 19, 2020, 9:27 AM IST

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் நாளை முதல் துவங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை முதல் துவங்குகிறது மாநாடு ஷூட்டிங்! உற்சாகத்தில் எஸ்.டி.ஆர் ரசிகர்கள்
நாளை முதல் துவங்குகிறது மாநாடு ஷூட்டிங்! உற்சாகத்தில் எஸ்.டி.ஆர் ரசிகர்கள்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்குப்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக சிம்புவை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

இதையடுத்து ஒரு வழியாக மீண்டும் சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதை சிம்புவின் பிறந்தநாளன்று இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தார். இந்த நிலையில் இன்று முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகையால், அதிலேயே 90% படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமுடிந்த பிறகு மீதமுள்ள படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்ஸ் சிட்டியில் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதில் சிம்புவின் ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, எஸ். ஜே. சூர்யா, மனோஜ், டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதல் முறையாக இணைந்துள்ள வெங்கட் பிரபு, சிம்பு காம்போ மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க:

10 நாள்களில் முடியப்போகும் 'மாஸ்டர்' ஷூட்டிங் - கொண்டாட்டத்திற்குத் தயாராகும் விஜய் ரசிகர்கள்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்குப்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக சிம்புவை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

இதையடுத்து ஒரு வழியாக மீண்டும் சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. இதை சிம்புவின் பிறந்தநாளன்று இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தார். இந்த நிலையில் இன்று முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக வெங்கட் பிரபு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆகையால், அதிலேயே 90% படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமுடிந்த பிறகு மீதமுள்ள படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம்ஸ் சிட்டியில் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதில் சிம்புவின் ஜோடியாக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க, எஸ். ஜே. சூர்யா, மனோஜ், டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதல் முறையாக இணைந்துள்ள வெங்கட் பிரபு, சிம்பு காம்போ மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க:

10 நாள்களில் முடியப்போகும் 'மாஸ்டர்' ஷூட்டிங் - கொண்டாட்டத்திற்குத் தயாராகும் விஜய் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.