சமீபத்தில் மும்பைத் தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தனது ஹனிமூனை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார்.
அங்கு தனது ஹனிமூனை என்ஜாய் செய்வதை விட, விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதில்தான் காஜல் அகர்வால் அதிக கனவம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஆழ்கடலில் தனது கணவருடன் ஸ்கூபா டைவிங் மேற்கொள்ளும் புகைப்படத்தை காஜல் அகர்வால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு ”கடலில் தனிமையாக இருக்கும்போது நமக்கு பதில் கிடைக்காத கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேலும் எனக்கு ஆழ்கடல் எப்போதும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு நீல நிறம் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆழ்கடல் அமைதியானதும் ஆபத்தனாதும் கூட” எனத் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடிக்கவுள்ள காஜல், இந்த ஹனிமூனில் அழகான உடைகள் அணிந்து தனது ரசிகர்களைக் கிறங்கடித்து வருகிறார்.