- — CS Amudhan (@csamudhan) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— CS Amudhan (@csamudhan) December 21, 2019
">— CS Amudhan (@csamudhan) December 21, 2019
அதில், ‘இந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே எடுத்த முடிவு மர்மமாக உள்ளது என கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த மர்மமும் இல்லை என சிஎஸ்கே ரசிகர்களுக்கு தெரியும். சிஎஸ்கேவையும் தோனியை வெறுப்பவர்கள் மட்டுமே இது நியாயமற்ற புத்தியில்லாமல் தேர்வு செய்தனர் என்று கூறுவார்கள். எனக்கு தெரிந்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சிஎஸ்கேவின் ஒவ்வொரு வீரரும் தங்களது முழு திறனை உணர்ந்து சாம்பியன்களாக மாறிவருகின்றனர். இதற்கு உதரணமாக ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் சாம்பியன்களாக மாறியதை பார்க்கலாம்.
சிஎஸ்கே எப்போதும் வெளிநாட்டில் இருந்து இளம் வீரர்களை எடுக்கமால் பழைய வீரர்களையும் இளம் வீரர்களை இந்தியாவில் இருந்தும் தேர்வு செய்யும். இதற்கு காரணம் என்னவென்றால், வெளிநாட்டு இளம் வீரர்கள் நமது கிரிக்கெட் ஆடும் யுத்திகள் அறிந்து பின் நாளில் அவர்கள் நமக்கு எதிராக ஆடுவர். ஆனால் இந்திய இளம் வீரர்களுக்கு பின் நாளில் இந்திய அணிக்காக ஆடும் பொன்னான வாய்ப்பு கிடைக்கும்.
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் இரண்டு ஆண்டுகளில் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை. அவர் அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. ஃப்ளெமிங்கும் தோனியும் அர்ஜூனையும் கிருஷ்ணனனையும் போன்றவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.