ETV Bharat / sitara

BB DAY 5: சண்டையில் ஆரம்பித்து டீ டம்ளரில் முடிந்த நிகழ்ச்சி

author img

By

Published : Oct 9, 2021, 10:41 AM IST

பிக்பாஸ் ஐந்தாவது நாளான நேற்று (அக்.8) நிகழ்ச்சி முழுவதும் சண்டை, கண்ணிருடன் முடிந்தது.

நமீதா
நமீதா

சென்னை: பிக்பாஸ் 5ஆவது சீசனின், 5ஆம் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம். வியாழக்கிழமை (அக்.8) இரவு நடந்த நிகழ்வுகளோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் பிக்பாஸ்.

'லேடியோ ப்யூட்டிஃபுல் லேடியோ' பாடலை ஐக்கி பாட தாமரைச் செல்வி, ரேம்ப் வாக் செய்தார். உடனே சக போட்டியாளர்கள் அனைவரும் ஜாலி மோடுக்கு சென்றுவிட்டனர். பிக்பாஸ் வீடு முழுவதும் இரவு நேரத்தில் சந்தோஷ மழை பொழிந்தது.

பிறகு மாஃபியா என்ற பெயரில் பிரியங்கா, தாமரைச் செல்வி, நமீதா ஆகியோர் விளையாடினார்கள். (அப்படி என்ன மாஃபியா விளையாட்டு'னு நீங்கள் கேட்கலாம்... அதைத் தான் நாங்களும் யோசித்தோம்.. ஆனால் கடைசி வரை அதை பிக்பாஸ் நம்மிடம் காண்பிக்கவில்லை)

நமீதாவை சீண்டும் தாமரை செல்வி

அந்த விளையாட்டின் போது, நமீதா மக்கு மாதிரி நடந்துகொண்டதாகத் தாமரைச் செல்வி சீண்டினார். இதனால் காண்டான நமீதா, இந்த வீட்டில் நாளை பெரிய சண்டை இருக்கிறது, அது உனக்கும், எனக்கும் தான். நம்மதான் ப்ரோமோவில் இருக்கப் போகிறோம் என்றார். (அப்போ சண்டை போட்டால் ப்ரோமோவில் இருப்போம் என்று தெரிந்துதான் இப்படிச் செய்கிறீர்களா?)

எல்லை மீறிய சண்டை

இப்படி நமீதாவும், தாமரைச் செல்வியும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தாமரைச் செல்வி, 'உன் குணத்திற்கு 400 குழந்தைகள் கூட வளர்ப்ப' என்று சொல்ல, அதை நமீதா 'உன் பொழப்புக்கு' எனத் தவறாக நினைத்துவிடுகிறார். இதனால், திடீரென இருவருக்கும் இடையே உண்மையில் கலவரம் வெடித்தது.

உடனே நமீதா என்னைப் பற்றிப் பேசினால், 'வயது வித்தியாசம் பார்க்காமல் அசிங்க, அசிங்கமாகத் திட்டி விடுவேன்' என்றார். இதனால் மனமுடைந்த தாமரைச் செல்வி அழுகத் தொடங்கவிட்டார். இப்படியே அன்றைய இரவு முழுவதும் கழிந்தது.

அப்போ சண்டை இல்லையா

அடுத்த நாள் காலை 8 மணிக்குப் போட்டியாளர்களை எழுப்புவதற்காக பிக்பாஸ், 'எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டை கேட்கும்' பாடலை ஒலித்தார். பாடல் ஒலித்தவுடன் நெல்லிக்காய் மூட்டையை திறந்தவுடன் நெல்லிக்காய் சிதறி எப்பிடி ஓடி மூலைக்கு ஓடுமோ அதுபோல போட்டியாளர்கள் ஒவ்வொரு மூலையில் நடனமாடினர்.

பின்னர் ராஜு பாய், தாமரை செல்வியிடம், 'என்ன சண்டை போட்டு இரண்டு பேரும் கட்டி உருளுவீங்கன்ன பார்த்த படுத்து தூங்கிட்டீங்க' என்றார். உடனே தாமரைச் செல்வி, 'அக்காவுக்கும், தம்பிக்கும் இடையே சண்டை இருக்குது' எனக் கூறினார்.

இமான் அண்ணாச்சியின் சேட்டைகள்

இமான் அண்ணாச்சி, போட்டியாளர்கள் வீட்டிற்குள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதைச் செய்து காண்பித்தார். இதனால் இரவு முழுவதும் கலவரமாக இருந்த வீட்டில் சின்னதாகச் சிரிப்பு சத்தம் கேட்டது.

இமான்
இமான்

ஓகே ஃபன் எல்லாம் முடிந்தது, இப்போ நம்ப மெயின் டாஸ்க்கிற்கு வாங்க எல்லாரும் என பிக்பாஸ் சொல்லிவிட்டார்.

குடும்பத்தை இழந்து தவிக்கும் ஐக்கி

ஐக்கி, தான் ஒரு ரிலேஷன்ஷிப்ல வந்த பிரச்சினை காரணமாகப் பெற்றோரை விட்டு ஆறு வருடமாகப் பிரிந்து இருப்பதாகக் கூறினார்.

ஐக்கி
ஐக்கி

மேலும் தான் ஒரு தமிழ் பெண் என்பதால் பல முறை Rap-பாடல் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார். தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி. அதனால் தமிழ் மொழியை யாரும் ஏளனமாகப் பார்க்க வேண்டாம் என்றார். (ஐக்கிக்கு இவ்வளவு தமிழ் தெரியுமா?)

கணவர் தற்கொலையால் வாடும் பாவனி

அடுத்த நபராகப் பாவனி மேடையில் ஏறி தனது வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார். அவர் கூறுகையில், "நான்கு ஆண்டுகளாக காதலித்தவரைத் திருமணம் செய்துகொள்ளப் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டுவந்து திருமணம் செய்தோம் . சந்தோஷமாக இருவரும் உழைத்து, வீடு வாங்கினோம்.

பாவனி
பாவனி

ஒருநாள் சண்டையில் அவன் தற்கொலை செய்து கொண்டார். நானும் அவன் தூங்கிவிட்டான் என நினைத்தேன். காலையில்தான் அவர் உயிரிழந்தது தெரிந்தது. அவன் சென்ற பிறகு எனக்கு அழுகை வரவில்லை, பாதியில் என்னை விட்டுச் சென்றுவிட்டான் என்று கோபம் தான் இருந்தது. என் வாழ்க்கை முழுவதும் நான் தனியாக இருக்கவேண்டும் என்றே எழுதியிருக்கிறது போல' என கண்ணீர் மல்க பேசினார்.

பிறகு விடியற் காலையில் தாமரையை எழுப்பி ‘டீ’ குடிக்கலாம் வாங்க என்று நமீதா அவரை சமாதானம் செய்தார். அதுமட்டுமின்றி உங்களிடம் 'நான் இப்படிப் பேசியது யாருக்கும் தெரியவேண்டாம்' என்று நமீதா பேசுவதோடு நிகழ்ச்சி முடிக்கிறது.

இன்று (அக்.9) வாரக் கடைசி என்பதால், ஆண்டவர் போட்டியாளர்களிடம் வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்துக் கலந்துரையாடல் செய்வார்( ஆனா, உண்மை என்னான்ன அந்த எப்பிசோடுல பாதி ஆண்டவர் தன்னோட கதையத்தான் பேசுவாப்ல) அவர் என்னவெல்லாம் பேசக் காத்திருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: BB DAY 3: கண்ணீர்ப் புரட்சி எபிசோட் - வலிகளில் வழிகண்ட நமீதா

சென்னை: பிக்பாஸ் 5ஆவது சீசனின், 5ஆம் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம். வியாழக்கிழமை (அக்.8) இரவு நடந்த நிகழ்வுகளோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார் பிக்பாஸ்.

'லேடியோ ப்யூட்டிஃபுல் லேடியோ' பாடலை ஐக்கி பாட தாமரைச் செல்வி, ரேம்ப் வாக் செய்தார். உடனே சக போட்டியாளர்கள் அனைவரும் ஜாலி மோடுக்கு சென்றுவிட்டனர். பிக்பாஸ் வீடு முழுவதும் இரவு நேரத்தில் சந்தோஷ மழை பொழிந்தது.

பிறகு மாஃபியா என்ற பெயரில் பிரியங்கா, தாமரைச் செல்வி, நமீதா ஆகியோர் விளையாடினார்கள். (அப்படி என்ன மாஃபியா விளையாட்டு'னு நீங்கள் கேட்கலாம்... அதைத் தான் நாங்களும் யோசித்தோம்.. ஆனால் கடைசி வரை அதை பிக்பாஸ் நம்மிடம் காண்பிக்கவில்லை)

நமீதாவை சீண்டும் தாமரை செல்வி

அந்த விளையாட்டின் போது, நமீதா மக்கு மாதிரி நடந்துகொண்டதாகத் தாமரைச் செல்வி சீண்டினார். இதனால் காண்டான நமீதா, இந்த வீட்டில் நாளை பெரிய சண்டை இருக்கிறது, அது உனக்கும், எனக்கும் தான். நம்மதான் ப்ரோமோவில் இருக்கப் போகிறோம் என்றார். (அப்போ சண்டை போட்டால் ப்ரோமோவில் இருப்போம் என்று தெரிந்துதான் இப்படிச் செய்கிறீர்களா?)

எல்லை மீறிய சண்டை

இப்படி நமீதாவும், தாமரைச் செல்வியும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தாமரைச் செல்வி, 'உன் குணத்திற்கு 400 குழந்தைகள் கூட வளர்ப்ப' என்று சொல்ல, அதை நமீதா 'உன் பொழப்புக்கு' எனத் தவறாக நினைத்துவிடுகிறார். இதனால், திடீரென இருவருக்கும் இடையே உண்மையில் கலவரம் வெடித்தது.

உடனே நமீதா என்னைப் பற்றிப் பேசினால், 'வயது வித்தியாசம் பார்க்காமல் அசிங்க, அசிங்கமாகத் திட்டி விடுவேன்' என்றார். இதனால் மனமுடைந்த தாமரைச் செல்வி அழுகத் தொடங்கவிட்டார். இப்படியே அன்றைய இரவு முழுவதும் கழிந்தது.

அப்போ சண்டை இல்லையா

அடுத்த நாள் காலை 8 மணிக்குப் போட்டியாளர்களை எழுப்புவதற்காக பிக்பாஸ், 'எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டை கேட்கும்' பாடலை ஒலித்தார். பாடல் ஒலித்தவுடன் நெல்லிக்காய் மூட்டையை திறந்தவுடன் நெல்லிக்காய் சிதறி எப்பிடி ஓடி மூலைக்கு ஓடுமோ அதுபோல போட்டியாளர்கள் ஒவ்வொரு மூலையில் நடனமாடினர்.

பின்னர் ராஜு பாய், தாமரை செல்வியிடம், 'என்ன சண்டை போட்டு இரண்டு பேரும் கட்டி உருளுவீங்கன்ன பார்த்த படுத்து தூங்கிட்டீங்க' என்றார். உடனே தாமரைச் செல்வி, 'அக்காவுக்கும், தம்பிக்கும் இடையே சண்டை இருக்குது' எனக் கூறினார்.

இமான் அண்ணாச்சியின் சேட்டைகள்

இமான் அண்ணாச்சி, போட்டியாளர்கள் வீட்டிற்குள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதைச் செய்து காண்பித்தார். இதனால் இரவு முழுவதும் கலவரமாக இருந்த வீட்டில் சின்னதாகச் சிரிப்பு சத்தம் கேட்டது.

இமான்
இமான்

ஓகே ஃபன் எல்லாம் முடிந்தது, இப்போ நம்ப மெயின் டாஸ்க்கிற்கு வாங்க எல்லாரும் என பிக்பாஸ் சொல்லிவிட்டார்.

குடும்பத்தை இழந்து தவிக்கும் ஐக்கி

ஐக்கி, தான் ஒரு ரிலேஷன்ஷிப்ல வந்த பிரச்சினை காரணமாகப் பெற்றோரை விட்டு ஆறு வருடமாகப் பிரிந்து இருப்பதாகக் கூறினார்.

ஐக்கி
ஐக்கி

மேலும் தான் ஒரு தமிழ் பெண் என்பதால் பல முறை Rap-பாடல் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார். தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி. அதனால் தமிழ் மொழியை யாரும் ஏளனமாகப் பார்க்க வேண்டாம் என்றார். (ஐக்கிக்கு இவ்வளவு தமிழ் தெரியுமா?)

கணவர் தற்கொலையால் வாடும் பாவனி

அடுத்த நபராகப் பாவனி மேடையில் ஏறி தனது வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார். அவர் கூறுகையில், "நான்கு ஆண்டுகளாக காதலித்தவரைத் திருமணம் செய்துகொள்ளப் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டுவந்து திருமணம் செய்தோம் . சந்தோஷமாக இருவரும் உழைத்து, வீடு வாங்கினோம்.

பாவனி
பாவனி

ஒருநாள் சண்டையில் அவன் தற்கொலை செய்து கொண்டார். நானும் அவன் தூங்கிவிட்டான் என நினைத்தேன். காலையில்தான் அவர் உயிரிழந்தது தெரிந்தது. அவன் சென்ற பிறகு எனக்கு அழுகை வரவில்லை, பாதியில் என்னை விட்டுச் சென்றுவிட்டான் என்று கோபம் தான் இருந்தது. என் வாழ்க்கை முழுவதும் நான் தனியாக இருக்கவேண்டும் என்றே எழுதியிருக்கிறது போல' என கண்ணீர் மல்க பேசினார்.

பிறகு விடியற் காலையில் தாமரையை எழுப்பி ‘டீ’ குடிக்கலாம் வாங்க என்று நமீதா அவரை சமாதானம் செய்தார். அதுமட்டுமின்றி உங்களிடம் 'நான் இப்படிப் பேசியது யாருக்கும் தெரியவேண்டாம்' என்று நமீதா பேசுவதோடு நிகழ்ச்சி முடிக்கிறது.

இன்று (அக்.9) வாரக் கடைசி என்பதால், ஆண்டவர் போட்டியாளர்களிடம் வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்துக் கலந்துரையாடல் செய்வார்( ஆனா, உண்மை என்னான்ன அந்த எப்பிசோடுல பாதி ஆண்டவர் தன்னோட கதையத்தான் பேசுவாப்ல) அவர் என்னவெல்லாம் பேசக் காத்திருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: BB DAY 3: கண்ணீர்ப் புரட்சி எபிசோட் - வலிகளில் வழிகண்ட நமீதா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.