ஹைதராபாத்: கரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்திய பொருளாதார சிக்கல்களுக்கு இடையே, இந்திய வாகனத் தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் ஆட்டோமொபைல் சில்லறை வர்த்தக துறையின் உச்ச தேசிய அமைப்பான, இந்திய ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் -ஃபாடா) சமீபத்திய தரவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் நாட்டில் மொத்த வாகன பதிவு 42 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
மூன்று சக்கர வாகனங்கள்
இந்தியாவில் புதிய வணிக வாகன பதிவுகள் ஜூன் மாதத்தில் 84 சதவீதம் குறைந்து வெறும் 10,509 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 64,976 ஆக இருந்தது. அதே சமயம் மூன்று சக்கர வண்டிகள் 75 சதவீதம் குறைந்து 48,804 இலிருந்து 11,993 ஆக உள்ளது.
மேலும், இரு சக்கர வாகனம் மற்றும் தனிப்பட்ட வாகன பிரிவுகளின் பதிவு முறையே 41 சதவீதம் மற்றும் 38 சதவீதம் குறைந்துள்ளது. தனியார் நுகர்வு மந்தநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மத்தியில் சரக்கு தேவை குறைந்து வருவதால் இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, நுகர்வு குறைந்து காணப்படுவதால், புதிய கொள்முதல் செய்ய போக்குவரத்தாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஈடிவி பாரத் உடன் பேசிய ஃபாடாவின் துணைத் தலைவர் விங்கேஷ் குலாட்டி கூறியதாவது:-

நாடு முழுவதும் வாகன உற்பத்தி கோவிட்டுக்கு முந்தைய நிலைகளை விட மிகக் குறைவாக இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. கோவிட்-19 பாதிப்பு காரணமாக கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பொருளாதாரம் முற்றிலும் சுதந்திரமான பாதையில் திரும்பும் வரை மீட்பு இருண்டதாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
கடந்த சில மாதங்களாக பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மூன்று சக்கர வண்டி விற்பனை பிரிவும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஏனெனில் இதுபோன்ற வாகனங்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களால் கடன்களில் வாங்கப்படுகின்றன. இதற்கிடையில் பொதுமுடக்கம் (lockdown) காரணமாக சில்லறை கடன்களில் உள்ள தடைகளும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
மேலும், வெவ்வேறு மாவட்ட நிர்வாகங்கள் வெவ்வேறு வழிகாட்டுதல்களை வழங்குவதால் மூன்று சக்கர வண்டி நுகர்வு பாதிக்கப்படுகின்றன. தகுந்த இடைவெளியை மக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவதால், ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது மூன்று சக்கர ஓட்டுநர்களின் வருவாயை பெரிதும் பாதிக்கிறது. முன்பு ஒரே நேரத்தில் 3-5 பேர் ஒரே நேரத்தில் ஆட்டோவில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவிட்-19 தடுப்பூசி அல்லது தகுந்த இடைவெளி விதிமுறைகள் கணிசமாக குறையும் வரை மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை இயல்பாக்கப்பட வாய்ப்பில்லை.
இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனம் மற்றும் தனிப்பட்ட வாகனத்தின் வளர்ச்சி குறித்த கவலைகள், ஜூன் மாதத்திலும் நீடித்ததால் மீட்புக்கான உறுதியான அடையாளங்கள் தென்படவில்லை.
நாடு முழுவதும் ஊரடங்கினால் முடக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திருவிழாக்கள், திருமண சீசன் உள்ளிட்ட தேவை காரணிகள் இருந்தாலும் விற்பனை இழந்தது. ஆகவே, ஜூன் மாதத்தில் ஏராளமான கோரிக்கைகள் காணப்பட்டன.

இவ்வாறு விங்கேஷ் குலாட்டி ஈடிவி பாரத்து அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: அதல பாதாளத்தில் ஆட்டோமொபைல் துறை - 87% விற்பனை சரிவு!