ETV Bharat / jagte-raho

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - டிச. 10ஆம் தேதி மீண்டும் விசாரணை! - சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கு

மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலை வழக்கு, வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : Nov 11, 2020, 5:52 PM IST

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது காவலர்களும், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வடிவேல் முன்பாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் 8 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிறையில் சுதந்திரமாக இருக்க விட மறுப்பதாக நீதிபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - டிசம்பர் 10 அன்று மீண்டும் விசாரணை!

இதையும் படிங்க: ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது காவலர்களும், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வடிவேல் முன்பாக இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் 8 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சிறையில் சுதந்திரமாக இருக்க விட மறுப்பதாக நீதிபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட 9 காவலர்களும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - டிசம்பர் 10 அன்று மீண்டும் விசாரணை!

இதையும் படிங்க: ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.