ETV Bharat / jagte-raho

4 கிலோ தங்கக் கட்டிகளை திருடிச் சென்ற ஈரானிய கொள்ளையர்கள்! - ஈரானிய கொள்ளையர்கள்

சென்னைக்கு தங்கம் வாங்க வந்த ஆந்திர வணிகரிடம் டெல்லி காவல் துறையினர் எனக் கூறி 4 கிலோ தங்கக் கட்டிகளை ஈரானிய கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

theft
theft
author img

By

Published : Jan 11, 2020, 3:51 PM IST

ஆந்திராவில் நகைக்கடை வைத்திருப்பவர் கமலேஷ். அவரிடம் வேலை பார்க்கும் தினேஷ் என்பவர், ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன், சவுகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று 4 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிச் செல்லும்போது 4 அடையாளம் தெரியாத நபர்கள், தங்களை டெல்லி காவல் துறையினர் எனக்கூறி தினேஷிடம் சோதனையிட்டுள்ளனர். பின்னர், தினேஷ் பையிலிருந்த தங்கக் கட்டிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யானை கவுனி காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த காவலர்கள், டெல்லி காவல் துறையினர் போல வேடமிட்டு வந்த 4 நபர்கள் தங்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், இவர்கள் ஏற்கெனவே கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இக்கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையின் தனிப்படை விரைந்துள்ளது.

இதையும் படிங்க: நெல் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி இளைஞர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

ஆந்திராவில் நகைக்கடை வைத்திருப்பவர் கமலேஷ். அவரிடம் வேலை பார்க்கும் தினேஷ் என்பவர், ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன், சவுகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று 4 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கிச் செல்லும்போது 4 அடையாளம் தெரியாத நபர்கள், தங்களை டெல்லி காவல் துறையினர் எனக்கூறி தினேஷிடம் சோதனையிட்டுள்ளனர். பின்னர், தினேஷ் பையிலிருந்த தங்கக் கட்டிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யானை கவுனி காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த காவலர்கள், டெல்லி காவல் துறையினர் போல வேடமிட்டு வந்த 4 நபர்கள் தங்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், இவர்கள் ஏற்கெனவே கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இக்கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையின் தனிப்படை விரைந்துள்ளது.

இதையும் படிங்க: நெல் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி இளைஞர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

Intro:Body:ஆந்திரா நெல்லூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் டெல்லி போலீசார் எனக்கூறி 4 கிலோ தங்க கட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.

ஆந்திராவில் நகைக்கடை வைத்திருக்கும் கமலேஷ் என்பவரிடம் வேலை பார்க்கும் தினேஷ் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் சவுகார்பேட்டையில் தங்கம் வாங்க வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று 4 கிலோ தங்க கட்டிகளை வாங்கிச் செல்லும்போது 4 மர்ம நபர்கள் டெல்லி போலீசார் என சோதனையிட்டுள்ளனர்.பின்னர் சோதனை முடிந்து சென்ற பிறகு தினேஷ் பையிலிருந்த தங்கக்கட்டியை திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார்.இப்புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார் டெல்லி போலீசார் வேடமிட்டு 4 நபர் திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.பின்னர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.