ETV Bharat / jagte-raho

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு - விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

author img

By

Published : Dec 30, 2019, 4:44 PM IST

சென்னை: ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

suicide
suicide

கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஃபாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், இவ்வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று, தனது மகளின் அலைபேசிப் பதிவை அடிப்படையாகக் கொண்டு கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரிடம் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் புகாரளித்தார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் அடிப்படையில், வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதனையடுத்து, மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், இவ்வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஃபாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், இவ்வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று, தனது மகளின் அலைபேசிப் பதிவை அடிப்படையாகக் கொண்டு கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரிடம் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் புகாரளித்தார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்களின் அடிப்படையில், வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதனையடுத்து, மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கும், இவ்வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஃபாத்திமா கொலை செய்யப்பட்டிருக்கலாம் - தந்தை அப்துல் லத்தீப் சந்தேகம்

Intro:Body:சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கியது

கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை ஐஐடியில் பாத்திமா என்ற கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவியின் தந்தை முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனவும், மகளின் தற்கொலை தொடர்பான செல்போன் பதிவை அடிப்படையாகக் கொண்டு கேரள முதல்வர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் புகார் அளித்தார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் மாணவியின் தந்தை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து புகார் அளித்தார்.அதன்பின் இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை துவங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 150 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐ அதிகாரிகளும் அதனை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களையும் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளையும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கோட்டூர்புரம் போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கையை வைத்து வழக்குப்பதிவு செய்ததாக கூறி, தற்கொலை செய்துகொண்ட நாளன்று பேராசிரியர் லலிதா தேவி என்பவர் கொடுத்த புகார் மனுவை மட்டும் பதிவிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.