கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் அவதிப்படும் மது பிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர்.
இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு வனப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மேலும் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக எடுத்துவந்த ஏழு பேரை குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி