ETV Bharat / jagte-raho

மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!

author img

By

Published : Feb 11, 2020, 3:03 PM IST

சென்னை: மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்டு வைத்து ஒரு நிறுவனம் போல தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டதாக சிபிசிஐடி விசாரணையில் இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

accused
accused

இடைத்தரகர் ஜெயக்குமாரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இன்று ஐந்தாவது நாளாக சிபிசிஐடி தரப்பில் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் குரூப்-4, குரூப்-2A, வி.ஏ.ஓ. ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தான் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்டு என ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை செய்ததாக ஜெயக்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜெண்டுகளின் பெயர்களைச் சேகரித்துள்ள காவல் துறையினர், முறைகேட்டில் அவர்களுக்குள் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களையும் சேகரித்துவருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடாகப் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சிபிசிஐடி கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

இடைத்தரகர் ஜெயக்குமாரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இன்று ஐந்தாவது நாளாக சிபிசிஐடி தரப்பில் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் குரூப்-4, குரூப்-2A, வி.ஏ.ஓ. ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் தான் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்டு என ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை செய்ததாக ஜெயக்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜெண்டுகளின் பெயர்களைச் சேகரித்துள்ள காவல் துறையினர், முறைகேட்டில் அவர்களுக்குள் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களையும் சேகரித்துவருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடாகப் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சிபிசிஐடி கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது

Intro:Body:*டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என செயல்பட்டதாக ஜெயக்குமார் சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம்*

*2016 ம் விஏஒ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இரண்டு வி ஏ ஒக்கள் கைது*

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்ட ஓம்காந்தனை கடந்த 6 ஆம் தேதி போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் முக்கிய இடைத்தரகரான ஜெயகுமாரை ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று ஐந்தாவது நாளாக சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A, வி.ஏ.ஓ ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஓம்காந்தன் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் ஒன்றாக இருக்கும்போதே அவர்களை ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று முறைகேடு நடத்தியது எப்படி என்பது குறித்து நடித்துக்காட்டி அதை பதிவு செய்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் சேகரித்துள்ளனர்.

குரூப்-4 முறைகேடுகள் முறையே ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் இளையான்குடி மையங்களில் நடந்துள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் குரூப்-2A மற்றும் வி ஏ ஒ தேர்வு முறைகேடு எந்த மையத்தில் நடந்தது என்பதை இடைத்தரகர் ஜெயகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுவரை ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 2016 ஆம் ஆண்டு முதல் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மாவட்டத்திற்கு ஒருவர் ஏஜெண்டு என மல்டிலெவல் மார்க்கெட்டிங் போலவும் , ஜெயக்குமார் தலைமை ஏஜென்டாக ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை நடத்தியதாக விசாரணையில் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜெயக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜெண்டுகளின் பெயரை சேகரித்துள்ள போலீசார் அவர்களுக்கும் இதுவரை நடந்துள்ள முறைகேடு இருக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் டி.என்.பி.எஸ்.சி அலுவலக ஊழியரான ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A மற்றும் வி.ஏ.ஓ ஆகிய முன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பதையும் ஜெயக்குமார் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 குரூப் 2 ஏ, மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடாக பணியில் சேர்ந்த மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.