சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் ஐரோப்பிய, துருக்கி, லெபனன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில், துருக்கியில் வசிக்கும் சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் டயீப் எர்டோகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், " துருக்கியில் உள்ள பத்து லட்சம் சிரிய அகதிகளை அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பவுள்ளோம். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இருபது லட்சம் அகதிகளை சிரியாவிற்கு அனுப்பவுள்ளோம்" என்றார்.
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப்பெறுவதாக அமெரிக்க வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து பேராளிகள் கொல்லப்பட்டனர், லட்டக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அமெரிக்காவுக்கு குர்து போராளிகள் உதவினர். இவர்களை பயங்கரவாதிகள் என்று துருக்கி கருதுகிறது.
சிரியாவில் குர்து போராளிகள் வசமிருந்த சில பகுதிகளை துருக்கி கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.