ETV Bharat / international

இங்கிலாந்தில் துப்பாக்கிச்சூடு: குழந்தை உள்பட 6 பேர் கொலை

author img

By

Published : Aug 13, 2021, 11:28 AM IST

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் நகரில் நேற்று (ஆகஸ்ட். 12) நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

shooting
shooting

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் நகரில் நேற்று (ஆகஸ்ட்.12) மாலை அடையாளம் தெரியாத ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், ஓர் குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பிளைமவுத் நாடாளுமன்ற உறுப்பினர் லூக் பொல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று, எங்கள் நகரம், சமூகத்தின் மிகவும் மோசமான நாள். மக்கள் அனைவரும் பதற்றப்படாமல், காவல் துறையின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்ய பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் நகரில் நேற்று (ஆகஸ்ட்.12) மாலை அடையாளம் தெரியாத ஒருவர் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதில், ஓர் குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் உயரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பிளைமவுத் நாடாளுமன்ற உறுப்பினர் லூக் பொல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று, எங்கள் நகரம், சமூகத்தின் மிகவும் மோசமான நாள். மக்கள் அனைவரும் பதற்றப்படாமல், காவல் துறையின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்ய பள்ளிக்குள் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.