ETV Bharat / international

தடுப்பு மருந்தாலும் கரோனவை அழிக்க முடியாது - அதிர்ச்சித் தகவல்

author img

By

Published : May 29, 2020, 2:08 PM IST

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அது முற்றிலும் அழிக்க முடியாத ஒரு தொற்றாக மாறி நம் சமூகத்தில் தொடர்ந்து இருக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

COVID-19 vaccine
COVID-19 vaccine

கோவிட்-19 தொற்று தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கரோனா தொற்று என்பது அழிக்கவே முடியாத தொற்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தும் நான்கு கரோனா வைரஸ்கள் (தீநுண்மி) தற்போது சமூகத்தில் உள்ளதாகவும் இந்தக் கரோனா தீநுண்மி அவ்வாறு அழிக்க முடியாத ஐந்தாவது தொற்றாக மாறும் இடர் உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் வல்லுநர் சாரா கோபி கூறுகையில், "இந்தத் தீநுண்மி இங்கேயே இருந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தீநுண்மி தொற்றுடன் நாம் எப்படிப் பாதுகாப்பாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே கேள்வி" என்றார்.

கோவிட்-19 தொற்று தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்தத் தீநுண்மி குறித்த நமக்கு அதிக விஷயங்கள் தெரியாது, எனவே உடனடியாக இந்த ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் டாம் ஃப்ரீடென், "என்னிடம் பலரும் இந்தக் கரோனா காலத்தில் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்ன என்று கேட்கிறார்கள்.

கரோனாவை ஒரே விஷயத்தில் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்வதே அந்த ஒரு விஷயம் என்று நான் கருதுகிறேன். பல வழிமுறைகள் மூலமே கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

தடுப்பு மருந்து இல்லாமல் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வழி உள்ளது. அதாவது உலகில் பெரும்பாலான நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் உடலில் அதற்கான தடுப்பு மருந்து உருவாகும். இதன்மூலம் தீநுண்மி அவர்களை மீண்டும் தாக்கினால், அந்தத் தடுப்பு மருந்து கரோனா எளிதில் அழித்துவிடும்.

இதுதவிர கரோனா தீநுண்மியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், முதல் சில ஆண்டுகளில் உலகில் அந்தத் தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும். இதனால் சர்வதேச அளவிலும் பிரச்னைகள் ஏற்படலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இது தட்டம்மை, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களைப்போல நம் சமூகத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதே வல்லுநர்களின் கருத்து.

உலகெங்கும் இதுவரை 59 லட்சத்து 11 ஆயிரத்து 507 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா விளம்பரம்: ஹாலிவுட் ஸ்டுடியோவுடன் கைகோத்த உலக சுகாதார அமைப்பு!

கோவிட்-19 தொற்று தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கரோனா தொற்று என்பது அழிக்கவே முடியாத தொற்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்குச் சாதாரண சளியை ஏற்படுத்தும் நான்கு கரோனா வைரஸ்கள் (தீநுண்மி) தற்போது சமூகத்தில் உள்ளதாகவும் இந்தக் கரோனா தீநுண்மி அவ்வாறு அழிக்க முடியாத ஐந்தாவது தொற்றாக மாறும் இடர் உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் வல்லுநர் சாரா கோபி கூறுகையில், "இந்தத் தீநுண்மி இங்கேயே இருந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தீநுண்மி தொற்றுடன் நாம் எப்படிப் பாதுகாப்பாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே கேள்வி" என்றார்.

கோவிட்-19 தொற்று தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்தத் தீநுண்மி குறித்த நமக்கு அதிக விஷயங்கள் தெரியாது, எனவே உடனடியாக இந்த ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் டாம் ஃப்ரீடென், "என்னிடம் பலரும் இந்தக் கரோனா காலத்தில் செய்ய வேண்டிய ஒரே விஷயம் என்ன என்று கேட்கிறார்கள்.

கரோனாவை ஒரே விஷயத்தில் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்வதே அந்த ஒரு விஷயம் என்று நான் கருதுகிறேன். பல வழிமுறைகள் மூலமே கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

தடுப்பு மருந்து இல்லாமல் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வழி உள்ளது. அதாவது உலகில் பெரும்பாலான நபர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் உடலில் அதற்கான தடுப்பு மருந்து உருவாகும். இதன்மூலம் தீநுண்மி அவர்களை மீண்டும் தாக்கினால், அந்தத் தடுப்பு மருந்து கரோனா எளிதில் அழித்துவிடும்.

இதுதவிர கரோனா தீநுண்மியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், முதல் சில ஆண்டுகளில் உலகில் அந்தத் தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும். இதனால் சர்வதேச அளவிலும் பிரச்னைகள் ஏற்படலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இது தட்டம்மை, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களைப்போல நம் சமூகத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதே வல்லுநர்களின் கருத்து.

உலகெங்கும் இதுவரை 59 லட்சத்து 11 ஆயிரத்து 507 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா விளம்பரம்: ஹாலிவுட் ஸ்டுடியோவுடன் கைகோத்த உலக சுகாதார அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.