ETV Bharat / entertainment

சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

author img

By

Published : Aug 24, 2022, 8:13 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படப்பிடிப்பு தொடங்கியது
சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42வது படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.

தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு எழுத்தாளர் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பொழுது பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களிலும் சூர்யா நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:பெல்லி சூப்புலு இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர் படம்... கீதா கோலா

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.

தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளார்.

இப்படத்தின் பூஜை கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு எழுத்தாளர் மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பொழுது பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களிலும் சூர்யா நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:பெல்லி சூப்புலு இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர் படம்... கீதா கோலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.