ETV Bharat / entertainment

ஒன்றியத்தை உசுப்பேற்றிய 'பத்தல பத்தல' பாடல்: கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்

author img

By

Published : May 15, 2022, 8:15 PM IST

சமீபத்தில் வெளியான கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் பாடலில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்ற விவகாரத்தில் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தை உசுப்பேற்றிய ’பத்தல பத்தல’ பாடல்: கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்
ஒன்றியத்தை உசுப்பேற்றிய ’பத்தல பத்தல’ பாடல்: கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடலில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வரிகளை நீக்கக்கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல் எழுதி பாடி ஆடியுள்ள ’பத்தல பத்தல’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ’பத்தல பத்தல’ என்ற பாடலில் ஒன்றிய அரசை திருடன் என்றும், கரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாக பிரச்னைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதால், அதன் வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், ராஜ்கமல் நிறுவனத்திற்கு அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நிறுத்த வேண்டுமென்றும், சமந்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டுமென்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சற்றுமுன் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பத்த வைச்ச "பத்தல" பாடல் : ஒன்றியத்தை வம்பிழுத்ததாக போலீசில் புகார்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடலில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வரிகளை நீக்கக்கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல் எழுதி பாடி ஆடியுள்ள ’பத்தல பத்தல’ பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் ’பத்தல பத்தல’ என்ற பாடலில் ஒன்றிய அரசை திருடன் என்றும், கரோனா தடுப்பூசி திட்டத்தை விமர்சித்தும், சாதிய ரீதியாக பிரச்னைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதால், அதன் வரிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், ராஜ்கமல் நிறுவனத்திற்கு அந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நிறுத்த வேண்டுமென்றும், சமந்தப்பட்ட வரிகளை நீக்க வேண்டுமென்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சற்றுமுன் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பத்த வைச்ச "பத்தல" பாடல் : ஒன்றியத்தை வம்பிழுத்ததாக போலீசில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.