ETV Bharat / entertainment

கோவா திரைப்பட விழாவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற ’கிடா’ திரைப்படம்!!

author img

By

Published : Nov 26, 2022, 7:14 AM IST

கோவா திரைப்பட விழாவில் அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ள ’கிடா’ திரைப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது

கோவா திரைப்பட விழாவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ’கிடா’ திரைப்படம்
கோவா திரைப்பட விழாவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ’கிடா’ திரைப்படம்

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. படம் பார்த்தபின் அரங்கில் இருந்த அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டிப் படத்தினை பாராட்டினார்கள்.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.

கிடா பட இயக்குனர் ரா.வெங்கட் பேசுகையில், “எங்கள் படத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்ததைப் பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக்கதையின் உந்து சக்தி.

இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்றமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள்தான் படத்தை அதிகமாகக் கொண்டாடினார்கள். நான் என் தாத்தா பாட்டியுடன் வளர்ந்தேன், திரைப்படத்தை உருவாக்கும் போது எனது குழந்தைப் பருவ நினைவுகளிலிருந்து படத்திற்கான உத்வேகம் பெற்றேன்.

எனது தயாரிப்பாளர் ரவிகிஷோர் அவர்களுக்கு நன்றி. எனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதருடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார்.

இதையும் படிங்க: 'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ளாரா!- புதிய தகவல்

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. படம் பார்த்தபின் அரங்கில் இருந்த அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டிப் படத்தினை பாராட்டினார்கள்.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.

கிடா பட இயக்குனர் ரா.வெங்கட் பேசுகையில், “எங்கள் படத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்ததைப் பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக்கதையின் உந்து சக்தி.

இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்றமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள்தான் படத்தை அதிகமாகக் கொண்டாடினார்கள். நான் என் தாத்தா பாட்டியுடன் வளர்ந்தேன், திரைப்படத்தை உருவாக்கும் போது எனது குழந்தைப் பருவ நினைவுகளிலிருந்து படத்திற்கான உத்வேகம் பெற்றேன்.

எனது தயாரிப்பாளர் ரவிகிஷோர் அவர்களுக்கு நன்றி. எனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதருடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார்.

இதையும் படிங்க: 'வாரிசு' படத்தில் சிம்பு பாடியுள்ளாரா!- புதிய தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.