ETV Bharat / entertainment

"ஒரு விருது கூட கொடுக்கல" 'க/பெ ரணசிங்கம்' குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

author img

By

Published : May 6, 2023, 10:36 AM IST

கடந்த வருடம் தன்னை எந்தவொரு விழாவிற்கும் அழைக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

க/பெ.ரணசிங்கம் படத்திற்கு விருது வழங்காதது வருத்தம் - ஐஸ்வர்யா ராஜேஷ்
க/பெ.ரணசிங்கம் படத்திற்கு விருது வழங்காதது வருத்தம் - ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம், ஃபர்ஹானா. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே 5) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மனுஷ்யபுத்திரன், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ஜித்தன் ரமேஷ், கிட்டு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து நிகழ்வில் பேசிய நடிகர் கிட்டி, "நான் நடித்த முதல் 5 கதாபாத்திரங்கள் என்றால், இந்த படத்தின் கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும். கவித்துவம் வாழ்ந்து நிறைந்த படம் இது. மனிதத்தின் உண்மையான தேவைப் பிணைப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவைகள் நிறைந்த படமாக இயக்கி உள்ளார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், "ஒரு வழியாக படம் வெளியாகிறது. காரணம் 2 வருடமாக தாடி உடனே சுற்றிக் கொண்டிருந்தேன். இந்த படத்திற்காக நான் 7 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளேன். படத்தில் எனது காஸ்டியூம்களை பார்த்தால் பிச்சை எடுப்பது போல இருக்கும்" என்றார்.

மேலும், எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் பேசுகையில், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் வசனம் எழுதிய ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியானது என்று ஒவ்வொரு முறையும் போன் வந்தது. அப்படி 5 படங்களுக்கு மேல் வெளி வந்தது. ஆனால், தற்போதுதான் இந்த படம் வெளியாக உள்ளது. ஒரு படத்தில் கேமரா நன்றாக இருந்தாலும், நடிப்பு நன்றாக இருந்தாலும், திரைக்கதை நன்றாக இல்லை என்றால் அந்த படத்தை பார்க்கவே முடியாது. இந்த படத்தின் கதையை என்னிடம் வசனம் எழுதச் சொல்லி கொடுத்த போது ஒரு நாவலை போன்று இருந்தது. ஒரு பெண் தன்னை தக்க வைத்துக் கொள்ள தினமும் பல போராட்டங்களை செய்து வருகிறார். வெளியே பாதுகாப்பிற்காக காவல் துறையினர் எல்லாம் நிற்கிறார்கள். இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும், அவர்கள் நினைக்கும் படி இந்த படம் அப்படி இல்லை" என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "கடந்த வருடம் எனக்கு ‘சுழல்’ வெப் தொடர் மற்றும் ஆண்டு இறுதியில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் மட்டும் வெளியானது. தொடர்ந்து அனைத்து விருது விழாக்களிலும் என்னை கூப்பிட்டு விருது வழங்கியவர்கள், கடந்த வருடம் என்னை எந்த ஒரு விழாவிற்கும் அழைக்கக் கூடவில்லை. க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு விருது வழங்காததெல்லாம் எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படங்களில் கனா, க/பெ.ரணசிங்கம் படத்தைத் தொடர்ந்து இந்த ஃபர்ஹானா படம் என்னை அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். ஜித்தன் ரமேஷ் போன்று ஒரு கணவர் வேண்டும் என அனைவரும் ஏங்கும் விதமாக, அவர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்தப் படத்தின் மீது பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் அது ஏமாற்றத்தைத் தரும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக அமையும்” என கூறினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் பேசுகையில், “என்னுடைய படம் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளி வந்தது. மீண்டும் 4 வருடங்கள் கழித்து மே மாதம் படம் வெளி வருகிறது.

நான் ஒரு வலிமையான பெண்ணால் வளர்க்கப்பட்டவன். அது என் தாய். கரோனா நமது வாழ்க்கையை மாற்றி விட்டது. 2019ஆம் ஆண்டு என்னுடைய குடும்பத்தில் 4 மரணங்கள். மிகவும் துயரம் மிகுந்த ஆண்டு அது. நான் படத்தில் வேறு ஒரு கதையை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நான் பிறந்து வளர்ந்தது புதுப்பேட்டை. எங்களைச் சுற்றி நிறைய இஸ்லாமியர்கள் வீடு இருந்தது.

நீங்கள் எதையோ நினைத்து இந்த படத்தின் மீது பல எதிர்பார்ப்புகளை வைத்து உள்ளீர்கள். ஆனால் அது நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு எல்லாம் நாங்கள் பெரிய ஆட்கள் இல்லை.

இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் மற்றும் நிறைய பேர் இஸ்லாமியர்கள்தான். அவர்களுடன் படம் பார்க்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தது. ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார். நான் நல்ல படம் எடுப்பவன்தான். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் சென்ற பிறகுதான் இவர் என்னை நம்பி நடிக்க வந்தார்.

இதையும் படிங்க: விஜய் கால்ஷீட்டுக்காக கதையுடன் காத்திருக்கும் வெங்கட் பிரபு.. கஸ்டடி டிரைலர் வெளியீட்டு விழாவில் தகவல்!

சென்னை: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம், ஃபர்ஹானா. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே 5) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, மனுஷ்யபுத்திரன், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ஜித்தன் ரமேஷ், கிட்டு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து நிகழ்வில் பேசிய நடிகர் கிட்டி, "நான் நடித்த முதல் 5 கதாபாத்திரங்கள் என்றால், இந்த படத்தின் கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும். கவித்துவம் வாழ்ந்து நிறைந்த படம் இது. மனிதத்தின் உண்மையான தேவைப் பிணைப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவைகள் நிறைந்த படமாக இயக்கி உள்ளார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜித்தன் ரமேஷ், "ஒரு வழியாக படம் வெளியாகிறது. காரணம் 2 வருடமாக தாடி உடனே சுற்றிக் கொண்டிருந்தேன். இந்த படத்திற்காக நான் 7 கிலோ வரை உடல் எடையை குறைத்து உள்ளேன். படத்தில் எனது காஸ்டியூம்களை பார்த்தால் பிச்சை எடுப்பது போல இருக்கும்" என்றார்.

மேலும், எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் பேசுகையில், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் வசனம் எழுதிய ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியானது என்று ஒவ்வொரு முறையும் போன் வந்தது. அப்படி 5 படங்களுக்கு மேல் வெளி வந்தது. ஆனால், தற்போதுதான் இந்த படம் வெளியாக உள்ளது. ஒரு படத்தில் கேமரா நன்றாக இருந்தாலும், நடிப்பு நன்றாக இருந்தாலும், திரைக்கதை நன்றாக இல்லை என்றால் அந்த படத்தை பார்க்கவே முடியாது. இந்த படத்தின் கதையை என்னிடம் வசனம் எழுதச் சொல்லி கொடுத்த போது ஒரு நாவலை போன்று இருந்தது. ஒரு பெண் தன்னை தக்க வைத்துக் கொள்ள தினமும் பல போராட்டங்களை செய்து வருகிறார். வெளியே பாதுகாப்பிற்காக காவல் துறையினர் எல்லாம் நிற்கிறார்கள். இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும், அவர்கள் நினைக்கும் படி இந்த படம் அப்படி இல்லை" என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "கடந்த வருடம் எனக்கு ‘சுழல்’ வெப் தொடர் மற்றும் ஆண்டு இறுதியில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் மட்டும் வெளியானது. தொடர்ந்து அனைத்து விருது விழாக்களிலும் என்னை கூப்பிட்டு விருது வழங்கியவர்கள், கடந்த வருடம் என்னை எந்த ஒரு விழாவிற்கும் அழைக்கக் கூடவில்லை. க/பெ.ரணசிங்கம் திரைப்படத்திற்கு விருது வழங்காததெல்லாம் எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படங்களில் கனா, க/பெ.ரணசிங்கம் படத்தைத் தொடர்ந்து இந்த ஃபர்ஹானா படம் என்னை அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். ஜித்தன் ரமேஷ் போன்று ஒரு கணவர் வேண்டும் என அனைவரும் ஏங்கும் விதமாக, அவர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்தப் படத்தின் மீது பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஆனால் அது ஏமாற்றத்தைத் தரும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக அமையும்” என கூறினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் பேசுகையில், “என்னுடைய படம் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளி வந்தது. மீண்டும் 4 வருடங்கள் கழித்து மே மாதம் படம் வெளி வருகிறது.

நான் ஒரு வலிமையான பெண்ணால் வளர்க்கப்பட்டவன். அது என் தாய். கரோனா நமது வாழ்க்கையை மாற்றி விட்டது. 2019ஆம் ஆண்டு என்னுடைய குடும்பத்தில் 4 மரணங்கள். மிகவும் துயரம் மிகுந்த ஆண்டு அது. நான் படத்தில் வேறு ஒரு கதையை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நான் பிறந்து வளர்ந்தது புதுப்பேட்டை. எங்களைச் சுற்றி நிறைய இஸ்லாமியர்கள் வீடு இருந்தது.

நீங்கள் எதையோ நினைத்து இந்த படத்தின் மீது பல எதிர்பார்ப்புகளை வைத்து உள்ளீர்கள். ஆனால் அது நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு எல்லாம் நாங்கள் பெரிய ஆட்கள் இல்லை.

இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் மற்றும் நிறைய பேர் இஸ்லாமியர்கள்தான். அவர்களுடன் படம் பார்க்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தது. ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார். நான் நல்ல படம் எடுப்பவன்தான். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் சென்ற பிறகுதான் இவர் என்னை நம்பி நடிக்க வந்தார்.

இதையும் படிங்க: விஜய் கால்ஷீட்டுக்காக கதையுடன் காத்திருக்கும் வெங்கட் பிரபு.. கஸ்டடி டிரைலர் வெளியீட்டு விழாவில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.