சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் வடிந்திருந்தாலும், இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில்தான் காணப்படுகிறது.
சில இடங்களில் வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததால், மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாநகராட்சி தரப்பிலும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், உணவு போன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
-
Good morning friends,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா…
">Good morning friends,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 7, 2023
நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா…Good morning friends,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 7, 2023
நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா…
அது குறித்து அவர் தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலை கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை?