ETV Bharat / elections

'ஜல்லிக்கட்டு அனுமதிக்கு மோடிதான் காரணம்' - ஓபிஎஸ் - jallikattu

ராமநாதபுரம்: பரமக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு, எய்ம்ஸ் மருத்துமனை என அனைத்தும் தமிழத்திற்கு கிடைக்க முக்கிய காரணம் மோடிதான் என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்
author img

By

Published : Apr 8, 2019, 10:01 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனையும் ஆதரித்து தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அந்த பரப்புரையின்போது பேசிய அவர், "வரவிருக்கும் தேர்தல் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் திமுக கூட்டணியில் இருந்தது, அச்சமயம் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 10 பேர் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக சுமார் 42 கோடிகளை ஒதுக்கி என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

அதிமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய்விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் இந்த கழகம், புயல் வந்தாலும் சரி, சுனாமி வந்தாலும் சரி, பூகம்பமே வந்தாலும் ஒருபோதும் அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் வரக்காரணாக இருந்தது மோடிதான். மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காரணம் பிரதமர் மோடிதான் " என்று கூறினார்.

ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 கோடி தர பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ரூ.122 கோடி பயிர் காப்பீட்டு தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனையும் ஆதரித்து தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அந்த பரப்புரையின்போது பேசிய அவர், "வரவிருக்கும் தேர்தல் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் திமுக கூட்டணியில் இருந்தது, அச்சமயம் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 10 பேர் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக சுமார் 42 கோடிகளை ஒதுக்கி என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

அதிமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய்விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் இந்த கழகம், புயல் வந்தாலும் சரி, சுனாமி வந்தாலும் சரி, பூகம்பமே வந்தாலும் ஒருபோதும் அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் வரக்காரணாக இருந்தது மோடிதான். மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காரணம் பிரதமர் மோடிதான் " என்று கூறினார்.

ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 கோடி தர பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ரூ.122 கோடி பயிர் காப்பீட்டு தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்

புயல், சுனாமி, பூகம்பம் வந்தாலும் அதிமுகவை அசைக்கமுடியாது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.


Body:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆதரித்து தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பரமக்குடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது எதிர்வரும் தேர்தல் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை வெளிக் காட்டும் தேர்தலாக இருக்கும் என்றும்.

கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தபோது அவருடன் திமுக கூட்டணி அமைத்து இருந்தது அப்பொழுது காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 10 பெர் இருந்து தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் 42 கோடிகளை ஒதுக்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

அதிமுக நாடாளுமன்றத் தாக்குதலுக்கு பிறகு இருக்காது என்று திமுக தலைவரின் ஸ்டாலின் கூறுகிறார்.

ஆனால் புயல் வந்தாலும் சரி சுனாமி வந்தாலும் சரி பூகம்பம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டி மீண்டும்.கொண்டுவருவதற்கு பிரதமர் மோடி முக்கிய காரணமாக இருந்ததாகவும், அதேபோல் மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்க திட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து.
விவசாயிகளுக்கு முதல் 2000 வரை வழங்கும் திட்டத்தை திமுக நீதிமன்றம் சென்று தடுத்து வைத்திருப்பதாகவும் தேர்தலுக்கு பின்பு அதில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் குறிப்பாக இலவச மிக்சி ,கிரைண்டர் ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் பெண்களுக்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பான ஆட்சி அமைய நரேந்திர மோடி பிரதமராக்க வேண்டும் என்றும் மக்களிடம் கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்று கலர் கலராக சட்டைகளை அணிந்து கொண்டு வருவதாக ஆனால் அவரால் முதலமைச்சர் ஆக ஆக முடியாது என்றும் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை 2 கோடி ரூபாய் தர பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு 122 கோடி பயிர் காப்பீட்டு தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.