ETV Bharat / city

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம் - Monkey Box Virus

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 21, 2022, 7:01 PM IST

வேலூர்: தமிழ்நாட்டில் முழுவதும் 34ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த வகையில் வேலூர் சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரை சந்தித்து பேசப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்று 952 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. தடுப்பூசிகள் கையிருப்பாக 27 லட்சம் உள்ளநிலையில், மேலும் 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளோம். இந்த வாரம் நானும் சுகாதாரத்துறை செயலாளரும், டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவை புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரிகள், கூடுதல் கரோனஆ தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.

வேலூர் பழைய அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் நடந்துவரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் கேட்டதற்கிணங்க காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 'குரங்கம்மை' பாதிப்பு இல்லை. கேரளாவை ஒட்டிய 13 இடங்களில் தொடர் கண்காணிப்பில் உள்ளோம்.

ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் மத்திய அமைச்சரோடு தமிழ்நாடு அமைச்சராகி நானும் கலந்துகொள்கிறேன். அதில் உலத்துக்கே முன்மாதிரியாக உள்ள 'வீடு தேடி மருத்துவ திட்டம்' குறித்து ஆவணப்படுத்த உள்ளோம் என்றார்.


இதையும் படிங்க: அவசரநிலையில் அன்று பிடில் வாசித்தார் ரோம் மன்னன்... இன்று போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின்...

வேலூர்: தமிழ்நாட்டில் முழுவதும் 34ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த வகையில் வேலூர் சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரை சந்தித்து பேசப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்று 952 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. தடுப்பூசிகள் கையிருப்பாக 27 லட்சம் உள்ளநிலையில், மேலும் 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளோம். இந்த வாரம் நானும் சுகாதாரத்துறை செயலாளரும், டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவை புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரிகள், கூடுதல் கரோனஆ தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.

வேலூர் பழைய அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் நடந்துவரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் கேட்டதற்கிணங்க காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 'குரங்கம்மை' பாதிப்பு இல்லை. கேரளாவை ஒட்டிய 13 இடங்களில் தொடர் கண்காணிப்பில் உள்ளோம்.

ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் மத்திய அமைச்சரோடு தமிழ்நாடு அமைச்சராகி நானும் கலந்துகொள்கிறேன். அதில் உலத்துக்கே முன்மாதிரியாக உள்ள 'வீடு தேடி மருத்துவ திட்டம்' குறித்து ஆவணப்படுத்த உள்ளோம் என்றார்.


இதையும் படிங்க: அவசரநிலையில் அன்று பிடில் வாசித்தார் ரோம் மன்னன்... இன்று போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.