ETV Bharat / city

2090 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய சபாநாயகர்! - 2090 பேருக்கு நலத்திட்ட உதவி சபாநாயகர்

திருப்பூர் : சேவூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தனபால் 2090 பயனாளிகளுக்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தனபால்
author img

By

Published : Aug 19, 2019, 11:14 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகரும், அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

welfare assistance to 2090 people  school students laptop issues  thiruppur  2090 பேருக்கு நலத்திட்ட உதவி சபாநாயகர்  திருப்பூர்
மனு அளிக்க வந்த முன்னாள் மாணவர்கள்

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 2090 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இலவச மடிக்கணினிகள் இந்த கல்வியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருப்பதைக்கூறி, சபாநாயகரை முற்றுகையிட முயன்றனர்.

இந்நிலையில், அவர்களை பள்ளிக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், மடிக்கணினி கோரிக்கையை மனுவாக பெற்று சபாநாயகரிடம் கொடுத்தனர். அதன் காரணமாக மாணவர்கள் அமைதி காத்து வந்தனர்.

மாணவர்கள் அமைதியை கடைப்பிடித்தனர்

மேலும், இந்த தகவலை அறிந்த சபாநாயகர் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகரும், அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

welfare assistance to 2090 people  school students laptop issues  thiruppur  2090 பேருக்கு நலத்திட்ட உதவி சபாநாயகர்  திருப்பூர்
மனு அளிக்க வந்த முன்னாள் மாணவர்கள்

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் 2090 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இலவச மடிக்கணினிகள் இந்த கல்வியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள், தங்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் இருப்பதைக்கூறி, சபாநாயகரை முற்றுகையிட முயன்றனர்.

இந்நிலையில், அவர்களை பள்ளிக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், மடிக்கணினி கோரிக்கையை மனுவாக பெற்று சபாநாயகரிடம் கொடுத்தனர். அதன் காரணமாக மாணவர்கள் அமைதி காத்து வந்தனர்.

மாணவர்கள் அமைதியை கடைப்பிடித்தனர்

மேலும், இந்த தகவலை அறிந்த சபாநாயகர் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.

Intro:திருப்பூர் மாவட்டம் சேவூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் 2090 பயனாளிகளுக்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Body:திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும் அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பல்வேறு துறைகளின் சார்பில் 2090 பயனாளிகளுக்கு இரண்டு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார். இதில் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினிகளும் வழங்கப்பட்டது.

தற்பொழுது பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்த மடிக்கணினிகள் தற்பொழுது பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை அறிந்து சபாநாயகரை முற்றுகையிட்டு மனு அளிப்பதற்காக பள்ளியை நோக்கி விரைந்து வந்தனர் இதனை அறிந்த போலீசார் அவர்களை பள்ளிக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தி மனு அளிக்க உதவி செய்வதாக தெரிவித்தனர் இதனை அடுத்து மாணவர்கள் அமைதி காத்து வந்த நிலையில் இந்த தகவலை அறிந்த சபாநாயகர் மேடையிலேயே பேசும்பொழுது அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான ஆணை வந்துள்ளதாகவும் விரைவில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் இதனை அடுத்து மாணவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.