ETV Bharat / city

கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தன - கீதா ஜீவன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

author img

By

Published : Oct 22, 2019, 7:09 AM IST

தூத்துக்குடி: மாவட்டத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்த இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

கீதா ஜீவன் எம்.எல்.ஏ.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் என மழை வெள்ளதால் சூழப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சத்யா நகர்ப் பகுதியில், கனமழையின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாரும், எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

ஈடிவி பாரத் நிறுவனர் ராமோஜி ராவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

இச்சமயத்தில், மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளைத் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், “சத்யா நகர்ப் பகுதிகளில் உள்ள உப்பளத்திலிருந்து வெளியேறும் உபரி நீரானது, வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து நிற்கிறது.

இதனால் வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள். இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக இங்குள்ள மக்கள் வெளியேறி மாற்று இடத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.

கீதா ஜீவன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

பாதிக்கப்பட்ட சத்யா நகர் மக்கள் கூறுகையில், “இந்தப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 25 ஆண்டு காலமாகவே எங்கள் பகுதி இதே நிலையில் தான் இருந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் முழுமையாகச் சேதமடைந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் என மழை வெள்ளதால் சூழப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சத்யா நகர்ப் பகுதியில், கனமழையின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த யாரும், எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

ஈடிவி பாரத் நிறுவனர் ராமோஜி ராவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

இச்சமயத்தில், மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளைத் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், “சத்யா நகர்ப் பகுதிகளில் உள்ள உப்பளத்திலிருந்து வெளியேறும் உபரி நீரானது, வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து நிற்கிறது.

இதனால் வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள். இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக இங்குள்ள மக்கள் வெளியேறி மாற்று இடத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.

கீதா ஜீவன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

பாதிக்கப்பட்ட சத்யா நகர் மக்கள் கூறுகையில், “இந்தப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 25 ஆண்டு காலமாகவே எங்கள் பகுதி இதே நிலையில் தான் இருந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Intro:தூத்துக்குடியில் கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தன - கீதா ஜீவன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
Body:



தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மீண்டும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகள் மழைவெள்ளதால் சூழப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் கனமழையின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த குடும்பத்தினர் யாருக்கும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்யுமென்று வானிலை ஆராய்ச்சி மைய அறிவிப்பாலும் மக்கள் மிகக் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே தேங்கியுள்ள மழை நீரானது கழிவு நீரோடு கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு மற்றும் கிருமிகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பெய்து வரும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடித் துறைமுக படகுத் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்தபின் கீதா ஜீவன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்
தூத்துக்குடி சத்யா நகர் பகுதிகளில் உள்ள உப்பளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரானது, வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து நிற்கிறது. இதனால் வீடுகளில் உள்ளவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக இங்குள்ள மக்கள் வெளியேறி மாற்று இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே தற்போது குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என்றார்.


பாதிக்கப்பட்ட சத்யா நகர் மக்கள் கூறுகையில்,
சத்யா நகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக நாங்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மண் அள்ளி சுமந்துவந்து மழைநீர் தேங்கிய பள்ளத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 25 ஆண்டு காலமாகவே எங்கள் பகுதி இதே நிலையில் தான் இருந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரின் காரணமாக பள்ளிக் குழந்தைகளுக்கு கூட சாப்பாடு செய்து கொடுக்க முடியவில்லை.

உப்பள அசடு மற்றும் கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து நிற்பதால் சொறி சிரங்கு மற்றும் கால்களில் புண் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


பேட்டிகள் : கீதா ஜீவன் எம்.எல்.ஏ. , கனி, முத்துமாரி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.