ETV Bharat / city

அரிசி, தயிர், முட்டை போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி... நெல்லையில் நூதனப்போராட்டம்!

author img

By

Published : Jul 29, 2022, 6:43 PM IST

அரிசி, தயிர், முட்டை போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து நெல்லையில் இட்லி சாம்பார் வடை மாலையுடன் நூதனப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

அரிசி தயிர் முட்டை போன்ற அத்தியாவிச பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி
அரிசி தயிர் முட்டை போன்ற அத்தியாவிச பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி

திருநெல்வேலி: பால், தயிர், மோர் போன்ற உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பிறகு மேற்கண்ட பால், தயிர் உள்ளிட்டப்பொருட்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பேக்கேஜ் செய்யப்பட்ட பால், மோர் ஆகியவற்றிற்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசும் விளக்கம் அளித்தது. இருப்பினும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பால், தயிர், அரிசி, முட்டை போன்ற உணவுப்பொருட்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசைக்கண்டித்து நெல்லை சந்திப்பு தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனைவரும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் கழுத்தில் வடை மாலை அணிந்தபடியும், கையில் இட்லி, சாம்பார் மற்றும் தயிர், உப்பு, முட்டை போன்ற உணவுப்பொருட்களை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஏழை எளிய மக்கள் உணவைப்பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பெருமாள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஒன்றிய அரசு அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. ஏற்கெனவே வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கும் 28% உலகிலேயே இல்லாத அளவில் வரி உயர்த்தியுள்ளது.

அரிசி, தயிர், முட்டை போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி... நெல்லையில் நூதனப்போராட்டம்!

எனவே, உணவுப்பொருளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையைப் போல் இந்தியாவிலும் மக்கள் வாழ்வைப் பாதுகாக்க போராட வேண்டியநிலை ஏற்படும்’’ எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி: பால், தயிர், மோர் போன்ற உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப்பிறகு மேற்கண்ட பால், தயிர் உள்ளிட்டப்பொருட்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பேக்கேஜ் செய்யப்பட்ட பால், மோர் ஆகியவற்றிற்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசும் விளக்கம் அளித்தது. இருப்பினும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பால், தயிர், அரிசி, முட்டை போன்ற உணவுப்பொருட்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசைக்கண்டித்து நெல்லை சந்திப்பு தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் செந்தில் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனைவரும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் கழுத்தில் வடை மாலை அணிந்தபடியும், கையில் இட்லி, சாம்பார் மற்றும் தயிர், உப்பு, முட்டை போன்ற உணவுப்பொருட்களை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஏழை எளிய மக்கள் உணவைப்பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பெருமாள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஒன்றிய அரசு அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. ஏற்கெனவே வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கும் 28% உலகிலேயே இல்லாத அளவில் வரி உயர்த்தியுள்ளது.

அரிசி, தயிர், முட்டை போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு அதிக ஜிஎஸ்டி... நெல்லையில் நூதனப்போராட்டம்!

எனவே, உணவுப்பொருளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையைப் போல் இந்தியாவிலும் மக்கள் வாழ்வைப் பாதுகாக்க போராட வேண்டியநிலை ஏற்படும்’’ எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.