ETV Bharat / city

திருநங்கையாக மாறிய மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்

author img

By

Published : Dec 22, 2021, 6:32 PM IST

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mother killed transgender son in Salem
Mother killed transgender son in Salem

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. இவரது மகன் நவீன்குமார்(19) அண்மையில் திருநங்கையாக மாறியுள்ளார். அத்துடன் தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டுள்ளார். இதனால், உமாதேவி அவரை கண்டித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நவீன்குமார் படுகாயங்களுடன் வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உமாதேவியிடம் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நவீன்குமார் திருநங்கையாக மாறியது உமாதேவிக்கு பிடித்தவில்லை. ஆண் போல நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டயாப்படுத்தி உள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தெரிந்த நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொலையில் ஈடுபட்ட வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தவறாக நடக்க முயற்சி செய்ததால் மகனை வெட்டி கூறுபோட்டேன் - அதிரவைத்த தாயின் வாக்குமூலம்

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. இவரது மகன் நவீன்குமார்(19) அண்மையில் திருநங்கையாக மாறியுள்ளார். அத்துடன் தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டுள்ளார். இதனால், உமாதேவி அவரை கண்டித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நவீன்குமார் படுகாயங்களுடன் வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உமாதேவியிடம் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நவீன்குமார் திருநங்கையாக மாறியது உமாதேவிக்கு பிடித்தவில்லை. ஆண் போல நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டயாப்படுத்தி உள்ளார்.அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தெரிந்த நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொலையில் ஈடுபட்ட வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: தவறாக நடக்க முயற்சி செய்ததால் மகனை வெட்டி கூறுபோட்டேன் - அதிரவைத்த தாயின் வாக்குமூலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.