ETV Bharat / city

சேலம் மாவட்டத்திற்கு ரூ.1242 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Dec 11, 2021, 6:13 PM IST

Updated : Dec 12, 2021, 6:21 AM IST

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,242 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், CM Stalin in salem
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம்: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,"சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் ரூ. 530 கோடி செலவில், 520 கி.மீ., நீளத்திற்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவுநீர் உந்து நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் செயல்படுத்தப்படும்.

ரயில்வே மேம்பாலம்

மாநகராட்சிப் பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ. 158 கோடி செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ. 120 கோடிசெலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 20 கோடி செலவில் ‘மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம்’ அமைக்கப்படும்.

சேலத்தில் டைடல் பார்க்

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பெரும் ‘ஜவுளிப் பூங்கா’ சேலத்தில் அமைக்கப்படும்.

கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் சேலத்தில் 100 கொலுசு உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக தொழில் தொடங்கு ஏதுவாக பன்மாடி உற்பத்தி மையம், வெள்ளியை எடையிட்டு, பரிசோதிப்பதற்கான வசதிகள், வடிவமைப்பு வசதிகளுடன் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்படும்.

இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: படைவீரர் பிரதீப்பின் உடலை பெற்றுக்கொண்ட கேரள அமைச்சர்!

சேலம்: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,"சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் ரூ. 530 கோடி செலவில், 520 கி.மீ., நீளத்திற்கு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளும், கழிவுநீர் உந்து நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளும் செயல்படுத்தப்படும்.

ரயில்வே மேம்பாலம்

மாநகராட்சிப் பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ. 158 கோடி செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சேலத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ. 120 கோடிசெலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 20 கோடி செலவில் ‘மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம்’ அமைக்கப்படும்.

சேலத்தில் டைடல் பார்க்

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய பெரும் ‘ஜவுளிப் பூங்கா’ சேலத்தில் அமைக்கப்படும்.

கொலுசு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் சேலத்தில் 100 கொலுசு உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக தொழில் தொடங்கு ஏதுவாக பன்மாடி உற்பத்தி மையம், வெள்ளியை எடையிட்டு, பரிசோதிப்பதற்கான வசதிகள், வடிவமைப்பு வசதிகளுடன் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்படும்.

இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: படைவீரர் பிரதீப்பின் உடலை பெற்றுக்கொண்ட கேரள அமைச்சர்!

Last Updated : Dec 12, 2021, 6:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.