ETV Bharat / city

மதுரை அருகே கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jun 8, 2020, 3:14 PM IST

மதுரை: உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Car accident
Car accident

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாப்டூர்- பழையூர் சாலையிடையே சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நடுரோட்டில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டி.கல்லூப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி, முத்து என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அனுஷ் என்ற இளைஞர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். சூர்யா, மணிகண்டன், மகேஷ், பாலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாப்டூர் காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாப்டூர்- பழையூர் சாலையிடையே சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நடுரோட்டில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டி.கல்லூப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி, முத்து என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அனுஷ் என்ற இளைஞர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். சூர்யா, மணிகண்டன், மகேஷ், பாலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாப்டூர் காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.