ETV Bharat / city

ராஜராஜ சோழன் குறித்த பா. இரஞ்சித்தின் சர்ச்சைப் பேச்சு: முடிவடைந்த வாதங்கள்! - Pa Ranjith's

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கின் விசாரணை வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜசோழன் குறித்த பா. இரஞ்சித்
ராஜராஜசோழன் குறித்த பா. இரஞ்சித்
author img

By

Published : Sep 30, 2021, 2:57 PM IST

மதுரை: பா. இரஞ்சித் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "2019 ஜூன் 5 அன்று நீலப்புலிகள் அமைப்பின் சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து உண்மைகள் சிலவற்றைக் குறிப்பிட்டேன். நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

வழக்கை ரத்துசெய்ய கோரும் பா. இரஞ்சித்

பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுவருகிறது.

நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவுசெய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்தச் சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதி

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பா. இரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை வாதங்கள் முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராஜராஜசோழனும்... இரஞ்சித்தின் அரசியலும்...!

மதுரை: பா. இரஞ்சித் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "2019 ஜூன் 5 அன்று நீலப்புலிகள் அமைப்பின் சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து உண்மைகள் சிலவற்றைக் குறிப்பிட்டேன். நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

வழக்கை ரத்துசெய்ய கோரும் பா. இரஞ்சித்

பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுவருகிறது.

நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவுசெய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்தச் சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதி

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பா. இரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை வாதங்கள் முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராஜராஜசோழனும்... இரஞ்சித்தின் அரசியலும்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.