ETV Bharat / city

'விருது வழங்க தேடப்பட்ட யாசகர், நிவாரணம் வழங்க வந்தபோது கெளரவிக்கப்பட்டார்'

author img

By

Published : Aug 18, 2020, 9:55 AM IST

மதுரை: சுதந்திர தின விழாவில் விருது வழங்க தேடப்பட்டபோது, கிடைக்காத யாசகர் பூல்பாண்டியன் 9ஆவது முறையாக கரோனா நிவாரணம் வழங்க வந்தபோது ஆட்சியரால் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

Yasagar Poolpandian
Yasagar Poolpandian

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். அவர் மனைவி, மகன்கள், மகள் என வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் மனைவி உயிரிழந்தார். அதிலிருந்து பொதுசேவையில் ஆர்வம்கொண்ட இவர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்தப் பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து வருகிறார்.

அதேபோல மார்ச் மாதம் மதுரைக்கு வந்து யாசகம் பெற்று கிடைத்த ரூ. 10 ஆயிரம் பணத்தை, மே மாதம் கரோனா நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து 8 முறை ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தமாக இதுவரை ரூ.80 ஆயிரம் வழங்கி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது சேவையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறந்த சமூக சேவகருக்கான விருதை பூல் பாண்டியனுக்கும் வழங்கத் திட்டமிட்டார். அப்போது அவரை மாவட்ட நிர்வாகத்தினர் விருது வழங்கத் தேடியுள்ளனர்.

ஆனால், அவர் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில் நேற்று (ஆக.17) மாலை மாவட்ட ஆட்சியரிடம் ஒன்பதாவது முறையாக ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்க ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அவரைப் பாராட்டி ஆட்சியர் சிறந்த சமூக சேவகருக்கான விருதை வழங்கி, கெளரவித்து அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: எட்டாவது முறையாக கரோனா நிவாரணம் வழங்கிய யாசகர்!

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். அவர் மனைவி, மகன்கள், மகள் என வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் மனைவி உயிரிழந்தார். அதிலிருந்து பொதுசேவையில் ஆர்வம்கொண்ட இவர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்தப் பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து வருகிறார்.

அதேபோல மார்ச் மாதம் மதுரைக்கு வந்து யாசகம் பெற்று கிடைத்த ரூ. 10 ஆயிரம் பணத்தை, மே மாதம் கரோனா நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து 8 முறை ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தமாக இதுவரை ரூ.80 ஆயிரம் வழங்கி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது சேவையைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறந்த சமூக சேவகருக்கான விருதை பூல் பாண்டியனுக்கும் வழங்கத் திட்டமிட்டார். அப்போது அவரை மாவட்ட நிர்வாகத்தினர் விருது வழங்கத் தேடியுள்ளனர்.

ஆனால், அவர் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில் நேற்று (ஆக.17) மாலை மாவட்ட ஆட்சியரிடம் ஒன்பதாவது முறையாக ரூ.10 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்க ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அவரைப் பாராட்டி ஆட்சியர் சிறந்த சமூக சேவகருக்கான விருதை வழங்கி, கெளரவித்து அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: எட்டாவது முறையாக கரோனா நிவாரணம் வழங்கிய யாசகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.