ETV Bharat / city

கமல் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

author img

By

Published : Mar 12, 2021, 7:07 PM IST

மதுரை: பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசனின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

godse kamal
godse kamal

கடந்த 2019 ஆம் ஆண்டு, அரவக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யத் கமல் ஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் "மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது சர்ச்சைக்குரியது அல்ல. ஆகவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கவில்லை! - அண்ணா பல்கலை. விளக்கம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு, அரவக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யத் கமல் ஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் "மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது சர்ச்சைக்குரியது அல்ல. ஆகவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய இயலாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: 10% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கவில்லை! - அண்ணா பல்கலை. விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.