ETV Bharat / city

'கர்மா' அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்குத் தடை - உயர் நீதிமன்றக்கிளை

author img

By

Published : Oct 6, 2022, 7:51 PM IST

காவலர் பணியிட மாற்றத்திற்கு 'கர்மா'வின் அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடையினை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ளது.

’கர்மா’ அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
’கர்மா’ அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராகப் பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல், விடுப்பு எடுத்துக்கொள்வது மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால், மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணிமாற்றி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் காவலர் முருகன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது, எனக் கூறினார். இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவிற்குத்தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன், மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, 'காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இந்த பதவியில், இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இடமாற்றம் விதிக்கக்கூடாது என்பது குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய வாலிபர்; தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில் முதல் நிலை காவலராகப் பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல், விடுப்பு எடுத்துக்கொள்வது மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால், மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணிமாற்றி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் காவலர் முருகன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது, எனக் கூறினார். இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணி இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவிற்குத்தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன், மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, 'காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை. அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் இந்த பதவியில், இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இடமாற்றம் விதிக்கக்கூடாது என்பது குறித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க: மாணவி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய வாலிபர்; தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.