ETV Bharat / city

வெளிநாட்டு பறவைகளை கண்டு மகிழும் சுற்றுலா பயணிகள்

author img

By

Published : May 25, 2019, 2:57 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதியில் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடந்துள்ளனர்.

பறவைகள்

சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள பவானிசாகர் அணை சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தற்போது நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணை நீர் தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டி நீர் தேக்கப்பகுதி உள்ளதால் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்குக் காணப்படுகின்றன.

பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் காட்சியளிக்கும் பறவைகள்

ஆஸ்திரேலியா, சைபீரியா, இந்தியாவின் வடமாநிலங்கள் என பல இடங்களிலிருந்து, இங்கு பலவிதமான பறவைகள் வந்து தங்குவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் எனப் பல வகை பறவைகள் காலை, மாலை நேரங்களில் நீர் தேக்கப்பகுதியில் உள்ள மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. மேலும், இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இப்பகுதி மிகவும் அமைதியாக உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவதாகவும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள பவானிசாகர் அணை சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தற்போது நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணை நீர் தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டி நீர் தேக்கப்பகுதி உள்ளதால் தற்போது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்குக் காணப்படுகின்றன.

பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் காட்சியளிக்கும் பறவைகள்

ஆஸ்திரேலியா, சைபீரியா, இந்தியாவின் வடமாநிலங்கள் என பல இடங்களிலிருந்து, இங்கு பலவிதமான பறவைகள் வந்து தங்குவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் எனப் பல வகை பறவைகள் காலை, மாலை நேரங்களில் நீர் தேக்கப்பகுதியில் உள்ள மீன்கள் உணவாக உட்கொள்கின்றன. மேலும், இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இப்பகுதி மிகவும் அமைதியாக உள்ளதால் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவதாகவும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும் வெளிநாட்டுப்பறவைகள்  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_02_25_SATHY_FOREIGN_BIRDS_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கும் வெளிநாட்டுப்பறவைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலூக்காவில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் சுமார் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்த அணையின் முலம் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தற்போது நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் நீலகிரி கிழக்குச்சரிவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த விலங்குகள் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு நீர் அருந்த வருவது வழக்கம். வனப்பகுதியை ஒட்டி நீர்த்தேக்கப்பகுதி உள்ளதால் தற்போது வெளிநாட்டுப்பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, சைபீரியா மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களிலிருந்தும் இங்கு பலவிதமான பறவைகள் இங்கு வந்து தங்குவதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் மற்றும் பலவகை பறவைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள மீன்கள் மற்றும் புழு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களில் தங்கி ஓய்வெடுத்துக்கொள்கின்றன. சித்தன்குட்டை கிராம பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பார்வையாளர்களை அனுமதித்தால் வனப்பகுதிக்கு சென்று வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் என வனத்துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் வெளிநாட்டுப்பறவைகளை கண்டு ரசிக்கின்றனர். மேலும் இப்பகுதி மிகவும் அமைதியாக உள்ளதால் வெளிநாட்டுப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருவதாகவும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.