ETV Bharat / city

வழிவிடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்; கட்டட கரண்டியால் ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை  - அதிர்ச்சி வீடியோ

கோவை: சாலையில் வழிவிடுவது குறித்து எழுந்த வாக்குவாதத்தில் ஆட்டோ ஓட்டுநரை, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் கரண்டியால் சரமாரியாக தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

author img

By

Published : Sep 28, 2019, 10:41 PM IST

Updated : Sep 29, 2019, 3:28 PM IST

coimbatore Auto driver murder video

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், சரவணம்பட்டியிலிருந்து கீரணத்தம் பகுதிக்கு தன் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தின் ஆட்டோவை முந்தும்போது பிரச்னை தொடங்கியுள்ளது.

ஆட்டோ டிரைவரை கரண்டியால் தாக்கும் காட்சி

அது தொடர்பாக இருவருக்கும், அருண் பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முடிந்து அருண்பிரசாத் தனது ஆட்டோவை டீக்கடைக்கு அருகில் நிறுத்தியுள்ளார். அங்கேயும் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தை கட்டட பணிக்கு பயன்படுத்தும் கரண்டியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த அருண்பிரசாத் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தபின், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே அருண் பிரசாத்தின் உயிர் பிரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அருண் பிரசாத்தை கட்டட கரண்டியால் தாக்கியதால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கட்டட தொழிலாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அவர்களின் வாகன எண்ணைக் கொண்டும் காவல் துறையினர் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், சரவணம்பட்டியிலிருந்து கீரணத்தம் பகுதிக்கு தன் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தின் ஆட்டோவை முந்தும்போது பிரச்னை தொடங்கியுள்ளது.

ஆட்டோ டிரைவரை கரண்டியால் தாக்கும் காட்சி

அது தொடர்பாக இருவருக்கும், அருண் பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முடிந்து அருண்பிரசாத் தனது ஆட்டோவை டீக்கடைக்கு அருகில் நிறுத்தியுள்ளார். அங்கேயும் வந்த இரு நபர்கள் அருண் பிரசாத்தை கட்டட பணிக்கு பயன்படுத்தும் கரண்டியால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். தாக்குதலில் நிலைகுலைந்த அருண்பிரசாத் அங்கேயே மயங்கிவிழுந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தபின், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே அருண் பிரசாத்தின் உயிர் பிரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அருண் பிரசாத்தை கட்டட கரண்டியால் தாக்கியதால், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கட்டட தொழிலாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அவர்களின் வாகன எண்ணைக் கொண்டும் காவல் துறையினர் வலைவீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Intro:கோவை அருகே ஆட்டோ ஓட்டினர் கொலை,கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் கரண்டியை கொண்டு தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.Body:கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் அருண்பிரசாத் அப்பகுதியில் சொந்தமாக பயணிகள் ஆட்டோ ஓட்டி வருகிறார் இந்நிலையில் இன்று சரணம் பட்டியிலிருந்து கீரணத்தம் பகுதியில் வாடகைக்கு சென்றுள்ளார் அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் அருண் பிரசாத்துக்கும் இடையே சைடு கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே கைகலப்பாக மாறியது இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அருண்பிரசாத்தை கட்டிட பணிக்கு பயன்படுத்தும் கரண்டியால் கடுமையாக தாக்கினர் இதில் நிலைகுலைந்த அருண்பிரசாத் அங்கேயே மயங்கி விழுந்தார் இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் முதல்கட்ட விசாரணையில் அருண் பிரசாத்துக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தாக்கியதில் அருண்பிரசாத் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் எனவும் அவர்களின் வாகன எண்ணை வைத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்Conclusion:
Last Updated : Sep 29, 2019, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.