கோவை மாவட்டம் கணபதி, கே.ஆர்.ஜி நகர் 4ஆவது வீதியில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சரவணம்பட்டி காவல் துறையினர் அங்கு சோதனை செய்தனர்.
அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த முருகேசன் (31), கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சிவா, பாலாஜி ஆகியோர் உதவியுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தெரியவந்தது.
இதனையடுத்து, முருகேசனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்கள் நால்வரையும் அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சிவா, பாலாஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.