ETV Bharat / city

தாம்பரம் காவல் ஆணையரகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Jun 23, 2022, 5:15 PM IST

இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது முதல் மனைவி தாம்பரம் காவல் ஆணையரகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் தீக்குளிக்க முயற்சி
பெண் தீக்குளிக்க முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (37), கடந்த 10 வருடத்திற்கு முன்பு தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் செல்வி (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு எட்டு வயதில் மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி செல்வி பிரிந்து அகரம்தென் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் செல்வி தனது குடும்பத்துடன் கணவர் மணிவண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணிவண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மனைவி செல்வி மணிவண்ணனிடம் சென்று இரண்டாவது திருமணம் குறித்து கேட்டுள்ளார்.

பெண் தீக்குளிக்க முயற்சி

அப்போது மணிவண்ணன் செல்வியை அடித்து துரத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் செல்வி இது குறித்து கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் அமர்ந்து தனது 8 வயது மகன் மற்றும் சகோதரியுடன் செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செல்வி மீது தண்ணீரை ஊற்றி கையில் இருந்த தீ பெட்டியையும் பிடிங்கினர். சாலையில் இருந்து செல்வியை மீட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தேனி அரசு அலுவலரை சரமாரியாக வெட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (37), கடந்த 10 வருடத்திற்கு முன்பு தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் செல்வி (31) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு எட்டு வயதில் மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி செல்வி பிரிந்து அகரம்தென் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் செல்வி தனது குடும்பத்துடன் கணவர் மணிவண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணிவண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மனைவி செல்வி மணிவண்ணனிடம் சென்று இரண்டாவது திருமணம் குறித்து கேட்டுள்ளார்.

பெண் தீக்குளிக்க முயற்சி

அப்போது மணிவண்ணன் செல்வியை அடித்து துரத்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் செல்வி இது குறித்து கூடுவாஞ்ச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகார் அளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் முன் அமர்ந்து தனது 8 வயது மகன் மற்றும் சகோதரியுடன் செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செல்வி மீது தண்ணீரை ஊற்றி கையில் இருந்த தீ பெட்டியையும் பிடிங்கினர். சாலையில் இருந்து செல்வியை மீட்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் காவல் ஆணையரகம் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தேனி அரசு அலுவலரை சரமாரியாக வெட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.