ETV Bharat / city

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள்

author img

By

Published : Jan 21, 2020, 11:56 PM IST

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் 88, கணக்கு 88, இயற்பியல் 83, வேதியியல் 84 உட்பட மொத்தம் 1060 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 2017 -18 கல்வி ஆண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திக் குறிப்பு:

இந்த அறிவிப்பில் , "அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டது. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் இணையம் மூலம் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்கள் முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள் - பத்திரிக்கை செய்தி

விண்ணப்பிக்கும் முறை;

இந்த பணியிடங்டங்களில் எந்த பிரிவுகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு நான்கு விழுக்காடு எந்த பிரிவில் அளிக்கப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 2019 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் 57 வயது பூர்த்தி அடையாதவர் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு வழியில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. தேர்வர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை விண்ணப்பம் பதிவு செய்யும்போது கட்டாயம் அளிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை;

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் 190 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். 150 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் 100, இரண்டு மதிப்பெண் வினாக்கள் 40 ஆகியவை முக்கிய பாடத்திலிருந்து இடம்பெறும். 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இவர்களுக்கான கேள்வித்தாள் அனைத்து பாடங்களுக்கும் கேள்வி குறி வகையில் ஆங்கில மொழியில் மட்டுமே கேட்கப்படும். தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க;

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் 88, கணக்கு 88, இயற்பியல் 83, வேதியியல் 84 உட்பட மொத்தம் 1060 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 2017 -18 கல்வி ஆண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திக் குறிப்பு:

இந்த அறிவிப்பில் , "அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டது. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் இணையம் மூலம் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தற்போது உள்ள நடைமுறைகளின்படி இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்கள் முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிகள் - பத்திரிக்கை செய்தி

விண்ணப்பிக்கும் முறை;

இந்த பணியிடங்டங்களில் எந்த பிரிவுகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு நான்கு விழுக்காடு எந்த பிரிவில் அளிக்கப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 2019 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் 57 வயது பூர்த்தி அடையாதவர் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு வழியில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. தேர்வர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை விண்ணப்பம் பதிவு செய்யும்போது கட்டாயம் அளிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை;

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் 190 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். 150 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் 100, இரண்டு மதிப்பெண் வினாக்கள் 40 ஆகியவை முக்கிய பாடத்திலிருந்து இடம்பெறும். 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இவர்களுக்கான கேள்வித்தாள் அனைத்து பாடங்களுக்கும் கேள்வி குறி வகையில் ஆங்கில மொழியில் மட்டுமே கேட்கப்படும். தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க;

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

Intro:அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்



Body:அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை,
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு 22ம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டது.
அந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் ஜனவரி 22ம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம். பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தற்போது உள்ள நடைமுறைகளின் படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்கள் முடிவு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே அறிவிப்பை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. எனவே உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.

2017 -18 கல்வி ஆண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலிபணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும்.
சிவில் இன்ஜினியரிங் 112 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219 இடங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91 இடங்கள், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119 இடங்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135 இடங்கள், ஆங்கிலம் 88 இடங்கள், கணக்கு 88 இடங்கள், இயற்பியல் 83 இடங்கள், வேதியியல் 84 இடங்கள் உட்பட 1060 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த இடங்களில் எந்த பிரிவுகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதிக்கீடு 4 சதவீதம் எந்த பிரிவில் அளிக்கப்படும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு 2019 ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்னர் 57 வயது பூர்த்தி அடையாதவர் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த கல்வி தகுதியினை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு வழியில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. தேர்வர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது கட்டாயம் அளிக்க வேண்டும்.

இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கம்ப்யூட்டர் முறையில் 190 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் நடைபெறும். 150 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் 100, இரண்டு மதிப்பெண் வினாக்கள் 40 ஆகியவை முக்கிய பாடத்திலிருந்து இடம்பெறும். 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இவர்களுக்கான கேள்வித்தாள் அனைத்து பாடங்களுக்கும் கேள்குறி வகையில் ஆங்கில மொழியில் மட்டுமே கேட்கப்படும்.
தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அதில் கூறப்பட்டிருந்தது.



Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.