ETV Bharat / city

ரோட்டில் பூசணிக்காய் உடைக்காதீர்கள் - காவல்துறை வேண்டுகோள்! - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு நடுரோட்டில் திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்குமாறு, போக்குவரத்துக் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

broken pumpkin on road
author img

By

Published : Oct 5, 2019, 7:22 PM IST

Updated : Oct 5, 2019, 8:09 PM IST

ஆயுதபூஜையை முன்னிட்டு பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சில சமயங்களில் இவர்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச்செல்வதால், இவைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி செயல்பட்டால் விபத்துக்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல்துறையின் சார்பாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான முறையில் ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடுமாறும் காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு பெரும்பாலான வணிக வளாகங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சில சமயங்களில் இவர்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச்செல்வதால், இவைகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்துக் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி செயல்பட்டால் விபத்துக்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல்துறையின் சார்பாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான முறையில் ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடுமாறும் காவல்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:

லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!

Intro:Body:ஆயுத பண்டிகையை முன்னிட்டு நடுரோட்டில் திருஷ்டி பூசனிக்காயை உடைப்பதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறை வேண்டுகோள்..

ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் வணிக வளாகங்கள்,கடைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசனிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சில சமயங்களில் சாலைகளில் பூசனிக்காயை உடைத்து விட்டு செல்வதால் வாகனஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுவதாகவும்,இதனால் பின்னால் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் சாலைகளில் பூசனிக்காய் உடைப்பதை தவிர்க்க வேண்டும் மீறி செயல்பட்டால் விபத்துக்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

மேலும் பாதுகாப்பான முறையில் ஆயுதபூஜையை கொண்டாட காவல்துறை கேட்டு கொண்டுள்ளனர்.Conclusion:
Last Updated : Oct 5, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.