ETV Bharat / city

சஞ்ஜிப் பானர்ஜி இடமாறுதலை ரத்து செய்ய கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை

author img

By

Published : Nov 14, 2021, 4:46 PM IST

நீதித்துறையின் சுயேச்சையான செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Sanjib Banerjee
Sanjib Banerjee

சென்னை : சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்வது, இந்தியாவில் பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றமான மேகாலாயாவிற்கு மாற்றுவது, வெளிப்படையான எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாதது ஆகிய காரணங்களால் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.

இதற்கு முன்பும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி அவர்கள் இதே போன்று மேகாலாயாவிற்கு மாற்றப்பட்டதும், அதன் பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்ததும் நடந்துள்ளது. இதேபோன்று, வேறு சில நீதிபதிகளுக்கும் நடந்துள்ளது. எனவே தான் நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக அல்லாமல் நீதித்துறையை அச்சுறுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான ஒன்றிய பாஜக அரசின் தலையீடாகவே பார்க்கப்படுகிறது.

இந்தக் காரணத்தினால் தான் பார் கவுன்சிலும் அரசியல் கடந்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் இந்த மாறுதலை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, நீதித்துறையில் தலையீடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவே நீடிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம், அவசர நிலையை நினைவூட்டுகிறது- வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

சென்னை : சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக வந்துள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்வது, இந்தியாவில் பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றமான மேகாலாயாவிற்கு மாற்றுவது, வெளிப்படையான எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாதது ஆகிய காரணங்களால் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.

இதற்கு முன்பும் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி அவர்கள் இதே போன்று மேகாலாயாவிற்கு மாற்றப்பட்டதும், அதன் பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்ததும் நடந்துள்ளது. இதேபோன்று, வேறு சில நீதிபதிகளுக்கும் நடந்துள்ளது. எனவே தான் நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக அல்லாமல் நீதித்துறையை அச்சுறுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான ஒன்றிய பாஜக அரசின் தலையீடாகவே பார்க்கப்படுகிறது.

இந்தக் காரணத்தினால் தான் பார் கவுன்சிலும் அரசியல் கடந்து அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் இந்த மாறுதலை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, நீதித்துறையில் தலையீடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவே நீடிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஒன்றிய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம், அவசர நிலையை நினைவூட்டுகிறது- வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.