இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "பணத்தைக் கொண்டு மோடியின் சர்வாதிகார ஆட்சி கர்நாடகாவில் வெற்றிபெற்றுள்ளது. மனிதர்களுக்கு பலவீனம் உள்ளது; பாஜக அதை பயன்படுத்தி விலைபேசுகிறது அல்லது பலவீனமாக்க முயற்சி செய்கிறது. ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையதல்ல.
ஆளுநர் அதிகாரம், பணபலம் உள்ளிட்டவை பயன்படுத்தி மத்திய அரசு, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் அரசாங்கம் தோற்கவில்லை; ஜனநாயகம்தான் தற்காலிகமாக தோல்வி அடைந்தள்ளது. விரைவில் அங்கு ஜனநாயகம் வெற்றிபெறும்" எனத் தெரிவித்தார்.