ETV Bharat / city

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Jul 25, 2020, 8:11 PM IST

சென்னை: சேலத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”சேலம் மாவட்டம், கெங்கவள்ளி தாலுக்காவில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைச் சட்ட விரோதமாக அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாவட்ட ஆட்சியர், இந்த சமய அறநிலையத் துறை ஆகியவற்றுக்கு மனு அளித்தேன்.

கெங்வள்ளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு கோயில் நிலத்தில் 1.57 ஹெக்டேர் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மாற்றம் செய்திருப்பது மாவட்ட வருவாய் அலுவலர் நேரடி ஆய்வில் தெரியவந்தது. 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்கக்கோரி 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கிய புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால், சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்து தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”சேலம் மாவட்டம், கெங்கவள்ளி தாலுக்காவில் உள்ள கம்பராய பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைச் சட்ட விரோதமாக அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மாவட்ட ஆட்சியர், இந்த சமய அறநிலையத் துறை ஆகியவற்றுக்கு மனு அளித்தேன்.

கெங்வள்ளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு கோயில் நிலத்தில் 1.57 ஹெக்டேர் நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மாற்றம் செய்திருப்பது மாவட்ட வருவாய் அலுவலர் நேரடி ஆய்வில் தெரியவந்தது. 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீட்கக்கோரி 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கிய புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால், சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்து தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.