ETV Bharat / city

"கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை"

author img

By

Published : Dec 4, 2019, 9:32 PM IST

Updated : Dec 4, 2019, 10:35 PM IST

சென்னை: கணினி ஆசிரியர் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

கணினி  ஆசிரியர் தேர்வு
கணினி ஆசிரியர் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு இணையம் மூலம் ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது சர்வரில் ஏற்பட்ட பிரச்னையால் தேர்வு பாதிக்கப்பட்டது. அதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வினை எழுதியவர்கள் குற்றம்சாட்டினர்.

தேர்வர்கள் ஒவ்வொருவரின் வினாத்தாளும் மாறுபட்டு இருக்கும். அதனால் எந்தவித முறைகேடும் நடைபெற்று இருக்காது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா விளக்கமளித்தார்.

இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வானவர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு இணையம் மூலம் ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது சர்வரில் ஏற்பட்ட பிரச்னையால் தேர்வு பாதிக்கப்பட்டது. அதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வினை எழுதியவர்கள் குற்றம்சாட்டினர்.

தேர்வர்கள் ஒவ்வொருவரின் வினாத்தாளும் மாறுபட்டு இருக்கும். அதனால் எந்தவித முறைகேடும் நடைபெற்று இருக்காது என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா விளக்கமளித்தார்.

இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வானவர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மேலும் ஒருவர் கைது... தொடரும் சிபிசிஐடி விசாரணை

Intro:கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை


Body:
கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை
சென்னை,
கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை எனவும், தேர்வு செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.அப்போது சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால் தேர்வு பாதிக்கப்பட்டது. அதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வினை எழுதியவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து அப்போதைய ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விளக்கமளித்தார். ஒவ்வொரு தேர்வர் வினாத்தாளும் மாறுபட்டு இருக்கும். அதனால் எந்தவித முறைகேடும் நடைபெற்று இருக்காது என கூறினார்.

இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25 ம் தேதி(இன்று) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப் பட்டுள்ளன.

தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் தேர்வர்களின் தேர்வின் விவரப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை டிசம்பர் 2-ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தேர்வர்கள் உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதற்காக தகுதிப்பெற்ற 1565 தேர்வர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கூறியதாவது, முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை என்பதை தீவிர விசாரணை மூலம் கண்டறிந்துள்ளோம்.
மேலும் அப்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக இருந்தவரிடமும் முழுமையாக நடந்தவை குறித்து விசாரித்து தெரிந்து கொண்டோம். மேலும் அப்போதைய ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நடத்திய விசாரணையிலும் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்பதை கண்டறிந்துள்ளார்.
எனவே கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுக்கான மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் இது குறித்து யார் புகார் அளித்தாலும் அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்முறையாக கம்ப்யூட்டர் மூலம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வினை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர்.
மேலும் இந்த தேர்வு முடிவு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 814 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.




Conclusion:
Last Updated : Dec 4, 2019, 10:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.