ETV Bharat / city

குயின்ஸ்லேண்ட் பூங்காவை காலி செய்யக் கூறி, அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து!

author img

By

Published : Jun 16, 2022, 10:11 PM IST

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
mhc

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, அருள்மிகு காசி விஷ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணு கோபாலேஷ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்காவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவில், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோயில்களுக்குச் சொந்தமான நிலம் அல்ல என்றும், இந்த நிலம் வருவாய் துறைக்கு சொந்தமானதா? அறநிலையத் துறைக்கு சொந்தமானதா? என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகக் கூறி, குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"அக்னி பாத்" திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, அருள்மிகு காசி விஷ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணு கோபாலேஷ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்காவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவில், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோயில்களுக்குச் சொந்தமான நிலம் அல்ல என்றும், இந்த நிலம் வருவாய் துறைக்கு சொந்தமானதா? அறநிலையத் துறைக்கு சொந்தமானதா? என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதாகக் கூறி, குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"அக்னி பாத்" திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.