ETV Bharat / city

இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை: தப்பி ஓடிய கணவன் 2 மணிநேரத்தில் கைது

author img

By

Published : Jan 22, 2021, 12:10 PM IST

சென்னை: முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரும்பு பைப்பால் அடித்து இரண்டாவது மனைவியை கொலை செய்து தப்பி சென்ற கணவனை 2 மணிநேரத்தில் ஆவடி காவல் துறையினர் கைது செய்தனர்.

இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை: தப்பி ஓடிய கணவன் 2 மணிநேரத்தில் கைது
இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை: தப்பி ஓடிய கணவன் 2 மணிநேரத்தில் கைது

ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோவில் தெருவில் வசித்தவர் சரிதா இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு ஷர்மிலி (7) என்ற மகள் உண்டு. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதன் (42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர், மாட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதன், சரிதா இருவரும் 2ஆவது திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இவர்கள் இருவரும் ஆவடி மேல்பாக்கத்தில் வசித்து வந்தனர். மேலும், சரிதாவுக்கு மூத்த மகள் ஷர்மிலியோடு தற்போது, மெகிலினா என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு முன்பு சரிதா பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு சரிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என மதன் கூறிவிட்டார்.

இருந்த போதிலும், அவர் சமீபகாலமாக மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். மதனிடம் முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தான் என்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துகிறாய், அப்படி இருக்கையில் மீண்டும் அவர்களிடம் உறவாடுவது ஏன் எனக்கேட்டு தகராறு செய்துள்ளார்.

இப்பிரச்னை அவர்களுக்கிடையே கடந்த இரு தினங்களாக நடந்து வந்துள்ளது. மீண்டும் மதன், சரிதா ஆகியோருக்கிடையே தகராறு வெடித்துள்ளது. இதில், சரிதா, மதனை அவதூறாக திட்டி சண்டை போட்டுள்ளார் அச்சமயம் மூத்த மகள் ஷர்மிலியும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மதன் வீட்டிலிருந்த இரும்பு பைப்பை எடுத்து அவரின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தனது கண்முன் தாய் அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, ஷர்மிலி அதிர்ச்சி அடைத்து கதறி அழுதார். இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறை ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மதனை தீவிரமாக தேடி வந்த நிலையில் கொரட்டூர் அருகே ஆட்டோவில் வந்த மதனை ஆவடி காவல் ஆய்வாளர் காளிராஜ் இரண்டு மணி நேரத்தில் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தார். கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். முதல் மனைவியுடன் உறவை துண்டிக்க கோரி நடந்த தகராறில், 2ஆவது மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் ஆவடியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை: தடுக்க சென்ற அண்ணனுக்கும் வெட்டு

ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோவில் தெருவில் வசித்தவர் சரிதா இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு ஷர்மிலி (7) என்ற மகள் உண்டு. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதன் (42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர், மாட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதன், சரிதா இருவரும் 2ஆவது திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இவர்கள் இருவரும் ஆவடி மேல்பாக்கத்தில் வசித்து வந்தனர். மேலும், சரிதாவுக்கு மூத்த மகள் ஷர்மிலியோடு தற்போது, மெகிலினா என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு முன்பு சரிதா பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு சரிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என மதன் கூறிவிட்டார்.

இருந்த போதிலும், அவர் சமீபகாலமாக மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்துள்ளார். மதனிடம் முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தான் என்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துகிறாய், அப்படி இருக்கையில் மீண்டும் அவர்களிடம் உறவாடுவது ஏன் எனக்கேட்டு தகராறு செய்துள்ளார்.

இப்பிரச்னை அவர்களுக்கிடையே கடந்த இரு தினங்களாக நடந்து வந்துள்ளது. மீண்டும் மதன், சரிதா ஆகியோருக்கிடையே தகராறு வெடித்துள்ளது. இதில், சரிதா, மதனை அவதூறாக திட்டி சண்டை போட்டுள்ளார் அச்சமயம் மூத்த மகள் ஷர்மிலியும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மதன் வீட்டிலிருந்த இரும்பு பைப்பை எடுத்து அவரின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தனது கண்முன் தாய் அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, ஷர்மிலி அதிர்ச்சி அடைத்து கதறி அழுதார். இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7 மாத குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறை ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மதனை தீவிரமாக தேடி வந்த நிலையில் கொரட்டூர் அருகே ஆட்டோவில் வந்த மதனை ஆவடி காவல் ஆய்வாளர் காளிராஜ் இரண்டு மணி நேரத்தில் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தார். கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். முதல் மனைவியுடன் உறவை துண்டிக்க கோரி நடந்த தகராறில், 2ஆவது மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் ஆவடியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக்கொலை: தடுக்க சென்ற அண்ணனுக்கும் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.