ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர் - அசத்தல் உருவாக்கம்!

author img

By

Published : Jun 17, 2022, 5:50 PM IST

மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க யாளி மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் மோட்டார் சைக்கிள் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த சிறு தொகுப்பைக் காணலாம்.

மாற்றுத் திறனாளிகள்  மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனித்துவமான வாகனத்தை சென்னையைச் சேர்ந்த யாளி மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மாற்றுத்தினாளிகளுக்காக வடிவமைக்கப்படும் மூன்று சக்கர வாகனத்துக்கு மாற்றாக மோட்டார் சைக்கிள் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரணமாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையே, மூன்று சக்கர வாகனங்களாக மாற்றி அவர்களுக்கு பாதுகாப்பைத்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ஐஐடியின் ஆராய்ச்சித்துறையில் மூன்று சக்கரத்துடன் கூடிய மாற்றுத்திறனாளியே பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிமைத்தனர்.

ஆனால், மூன்று சக்கர பேட்டரி வண்டியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளும் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் மற்றவர்களின் துணையுடன் தான் ஏறி பயணிக்க வேண்டியதிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலை மனத்தில் கொண்டு யாளி மாெபைலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனம், தங்களது புதிய வடிவமைப்பு முயற்சியைத் தொடங்கியது.

மாற்றித்திறனாளிகள் சக்கர நாற்காலியோடு யாருடைய உதவியும் இல்லாமல், அப்படியே இந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள முடியும். சக்கர நாற்காலியை அப்படியே மூன்று சக்கர வாகன அமைப்புடன் பொருத்திக்கொள்ளலாம். இதற்கு வேறு யாரின் உதவியும் தேவை இல்லை. வாகனத்தின் உள்ளே அமர்ந்தபடி இயக்கவும் முடியும்.

மாற்றுத் திறனாளிகள்  மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்

இந்த வாகனம் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியுடன் சேர்த்து இதன் மொத்த எடை 160 கிலோ. இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 1.5 கிலோ வாட் திறன் உள்ள இரண்டு பேட்டரிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இந்த வடிவமைப்பை சென்னை ஐஐடி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அனில் பிரபாகர் தலைமையிலான குழுவினர் தயார் செய்து வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்

சக்திவேல் தாயப்பன் குழுவினரும் இணைந்து, இதனை முழுமையாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு அக்டோபர் மாதம் இதனை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்!

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனித்துவமான வாகனத்தை சென்னையைச் சேர்ந்த யாளி மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மாற்றுத்தினாளிகளுக்காக வடிவமைக்கப்படும் மூன்று சக்கர வாகனத்துக்கு மாற்றாக மோட்டார் சைக்கிள் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரணமாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையே, மூன்று சக்கர வாகனங்களாக மாற்றி அவர்களுக்கு பாதுகாப்பைத்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ஐஐடியின் ஆராய்ச்சித்துறையில் மூன்று சக்கரத்துடன் கூடிய மாற்றுத்திறனாளியே பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிமைத்தனர்.

ஆனால், மூன்று சக்கர பேட்டரி வண்டியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளும் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் மற்றவர்களின் துணையுடன் தான் ஏறி பயணிக்க வேண்டியதிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலை மனத்தில் கொண்டு யாளி மாெபைலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனம், தங்களது புதிய வடிவமைப்பு முயற்சியைத் தொடங்கியது.

மாற்றித்திறனாளிகள் சக்கர நாற்காலியோடு யாருடைய உதவியும் இல்லாமல், அப்படியே இந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள முடியும். சக்கர நாற்காலியை அப்படியே மூன்று சக்கர வாகன அமைப்புடன் பொருத்திக்கொள்ளலாம். இதற்கு வேறு யாரின் உதவியும் தேவை இல்லை. வாகனத்தின் உள்ளே அமர்ந்தபடி இயக்கவும் முடியும்.

மாற்றுத் திறனாளிகள்  மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்
மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்

இந்த வாகனம் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியுடன் சேர்த்து இதன் மொத்த எடை 160 கிலோ. இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 1.5 கிலோ வாட் திறன் உள்ள இரண்டு பேட்டரிகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஆராய்ச்சிகளுக்கு உதவி வருகிறது. இந்த வடிவமைப்பை சென்னை ஐஐடி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அனில் பிரபாகர் தலைமையிலான குழுவினர் தயார் செய்து வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வண்டியுடன் பயணிக்க ஸ்கூட்டர்

சக்திவேல் தாயப்பன் குழுவினரும் இணைந்து, இதனை முழுமையாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு அக்டோபர் மாதம் இதனை விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.