ETV Bharat / city

மருத்துவக் கல்லூரி இடங்கள் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

புதுச்சேரியிலுள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவிகளின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

author img

By

Published : Dec 12, 2020, 7:06 PM IST

puducherry medical reservation
puducherry medical reservation

சென்னை: 50 விழுக்காடு மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவிகளின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகள், தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்த கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், 2006ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், 50 விழுக்காடு இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மணக்குள விநாயகர் மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை அத்தியாவசிய சான்று பெறும்போது அரசுடனான ஒப்பந்தத்தில் 50 விழுக்காடு இடங்களை வழங்குவதாக எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்ட வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனமும் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 53 இடங்களை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவுக்கு வர எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், 2006ஆம் ஆண்டு விதிகளில் கூட "50 விழுக்காடு இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என்றே கூறியுள்ளதன் மூலம், ஒதுக்கீடு குறித்த முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முடிவிற்கே விடப்பட்டுள்ளது” எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை: 50 விழுக்காடு மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்க உத்தரவிட கோரிய ஏழு மாணவிகளின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகள், தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்த கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், 2006ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், 50 விழுக்காடு இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மணக்குள விநாயகர் மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை அத்தியாவசிய சான்று பெறும்போது அரசுடனான ஒப்பந்தத்தில் 50 விழுக்காடு இடங்களை வழங்குவதாக எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க ஒப்புக்கொண்ட வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனமும் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 53 இடங்களை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவுக்கு வர எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், 2006ஆம் ஆண்டு விதிகளில் கூட "50 விழுக்காடு இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யலாம் என்றே கூறியுள்ளதன் மூலம், ஒதுக்கீடு குறித்த முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முடிவிற்கே விடப்பட்டுள்ளது” எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.